உத்தம சோழனின் மெட்ராஸ் மியூசியம் செப்பேடு
| செப்பேட்டின் பெயர் | உத்தம சோழனின் மெட்ராஸ் மியூசியம் செப்பேடு |
|---|---|
| செப்பேடு கிடைக்கப் பெற்ற இடம் | சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியகம் |
| ஊர் | எழும்பூர் |
| வட்டம் | அமைந்தகரை |
| மாவட்டம் | சென்னை |
| மொழியும்எழுத்தும் | தமிழ், வடமொழி - தமிழ், கிரந்தம் |
| அரசு/ஆட்சியாளர் | சோழர் / உத்தம சோழன் |
| ஆட்சி ஆண்டு | 16 |
| வரலாற்று ஆண்டு | கி.பி.985 |
|
விளக்கம்
உத்தமசோழன் காஞ்சிபுரம் அரண்மனையில் அமர்ந்திருக்கையில், சிக்கல் என்ற ஊரைச் சேர்ந்த சோழ அதிகாரி சோழ மூவேந்த வேளாண் நக்கன் கணிச்சன் என்பவன் கச்சிப்பேட்டிலும் துண்டூனு கச்சேரி கிராமத்திலும் உள்ள கோயில் நிலங்களுக்காக கொள் நிறைக் கூலியும், களவு கூலியும் வசூலிக்கப்படுவதாகத் தெரிவித்தான். மேலும் இப்பொருளைக் கொண்டு விஷ்ணு கோயிலுக்கும், கரிகாலச் சேரியிலுள்ள இரு கோயில்களுக்கும் செலவிட அனுமதி வேண்டினான். இக்கோரிக்கையை ஏற்ற அரசன் கச்சிப்பேட்டிற்கு அருகிலுள்ள கம்புலர்பாடி, அதிமானப்பாடி ஊர்களைச் சேர்ந்த அரச குடும்பத்திற்கான நெசவாளிகளைக் கொண்டு கோயிலுக்கு பொருள் செலவிடுவதை மேற்பார்வையிடவும் ஆணையிட்டான். கோயில் நிர்வாகத்தில் பிராமணர்களைத் தவிர்த்து நெசவாளிகளும் பங்கெடுத்தமையை இச்செப்பேட்டின் மூலம் அறியமுடிகிறது. அரசனின் ஆணையை செப்பேட்டில் எழுதியவன் வீரப்பாடி என்ற ஊரைச் சேர்ந்த நற்பட்ட எண்ணாயிர மங்கள திட்டன் என்பவனாவான். |
|
|
குறிச்சொல்
|
|
|
குறிப்புதவிகள்
டாக்டர் மு.ராஜேந்திரன் இ.ஆ.ப., சோழர் காலச் செப்பேடுகள், அகநி வெளியீடு, வந்தவாசி, 2014 |
|
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 09 Oct 2018 |
| பார்வைகள் | 232 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 1 |