திருவையாற்றுச் செப்பேடு
| செப்பேட்டின் பெயர் | திருவையாற்றுச் செப்பேடு |
|---|---|
| செப்பேடு கிடைக்கப் பெற்ற இடம் | திருவையாறு |
| ஊர் | திருப்பனந்தாள் |
| வட்டம் | திருவிடைமருதூர் |
| மாவட்டம் | தஞ்சாவூர் |
| மொழியும்எழுத்தும் | தமிழ்-தமிழ் |
|
விளக்கம்
திருவையாற்றுக்குரிய செப்பேடு ஒன்று முழுவதும் எழுதப்பெறாமல் குறையுடன் காணப்படுகிறது. கைப்பிடியில் பஞ்சநதம் என்று எழுதப்பட்டுள்ளதால், இச் செப்பேடு திருவையாற்றுக்குரியதாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. பஞ்சநதம் என்ற தொடருக்குக் கீழ் பெரிய அளவில் சிவலிங்கம் வரையப்பட்டுள்ளது. சிவலிங்கத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டுள்ளது. இருபுறமும் பெரிய அளவில் விநாயகரும், நின்ற நிலையில் திருமால் உருவமும் வரைகோட்டு ஒவியத்தில் அழகிய முறையில் வரையப்பட்டுள்ளது. இடையில் ராமஜெயம் என்று பெரிய எழுத்துக்களில் தெலுங்கில் எழுதப்பட்டுள்ளது. செப்பேடு எழுதும் முறையை அறிந்து கொள்ள இச்செப்பேடு நன்கு உதவுகிறது. வரைகோட்டு ஒவியங்கள் வரையப்பட்டு, நிலச் சொல் வரையப்பட்டபின்னரே செப்பேட்டுச் செய்திகள் வெட்டப்படுகின்றன என்பதை இதன் மூலம் நாம் அறிகின்றோம். |
|
|
குறிச்சொல்
|
|
|
குறிப்புதவிகள்
செ.இராசு, திருப்பனந்தாள் காசிமடத்துச் செப்பேடுகள், கொங்கு ஆய்வு மையம்,
|
|
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 19 Dec 2017 |
| பார்வைகள் | 127 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 0 |