செப்பேடு
முத்து ரெகுநாத சேதுபதி செப்பேடு
| செப்பேட்டின் பெயர் | முத்து ரெகுநாத சேதுபதி செப்பேடு |
|---|---|
| செப்பேடு கிடைக்கப் பெற்ற இடம் | திருப்புல்லாணி |
| ஊர் | திருப்புல்லாணி |
| வட்டம் | இராமநாதபுரம் |
| மாவட்டம் | இராமநாதபுரம் |
| மொழியும்எழுத்தும் | தமிழ்-தமிழ் |
| அரசு/ஆட்சியாளர் | சேதுபதி / முத்து ரெகுநாத சேதுபதி |
| வரலாற்று ஆண்டு | கி.பி.1729 |
|
விளக்கம்
முத்து ரெகுநாத சேதுபதி திருப்புல்லாணி தலத்து தெய்வச்சிலை பெருமாளுக்கு ஆதன் கொத்தங்குடி கிராமத்தின் பிரமதேயம் பங்கு ஒன்று நீங்கலாக எஞ்சிய சீவிதமான பங்கினையும் இந்தக் கிராமத்தின் மடை, குழி, ஏந்தல்களையும் சர்வமான்யமாக கட்டளையிட்டதை இந்தச் செப்பேடு தெரிவிக்கின்றது. தானம் வழங்கப்பட்ட கிராமத்தின் நான்கு எல்லைகளாகக் குறிக்கப்பட்டுள்ள ஆலங்குளம், மருதங்குளம், பூசரி, கடம்போடை, கண்ணாகுடி, ஆய்க்குடி, ஐங்கலப்புல்லாணி, கீழ் விடத்தை, மேல்விடத்தை, ஆனைகால், பெரிய இலை, சின்ன இலை ஆகியன குறிப்பிடப்பட்டுள்ளன. |
|
|
குறிச்சொல்
|
|
|
குறிப்புதவிகள்
சேதுபதி மன்னர் செப்பேடுகள், டாக்டர் எஸ்.எம்.கமால், ஷர்மிளா பதிப்பகம்,
|
|
செப்பேடு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 18 Dec 2017 |
| பார்வைகள் | 114 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 0 |