செப்பேடு
கோடியக்காடு செப்பேடு
| செப்பேட்டின் பெயர் | கோடியக்காடு செப்பேடு |
|---|---|
| செப்பேடு கிடைக்கப் பெற்ற இடம் | கோடியக்காடு |
| ஊர் | கோடியக்காடு |
| வட்டம் | வேதாரண்யம் |
| மாவட்டம் | நாகப்பட்டினம் |
| மொழியும்எழுத்தும் | தமிழ்-தமிழ் |
| வரலாற்று ஆண்டு | கி.பி.1273 |
| அளவுகள் / பரிமாணங்கள் | 20 செ.மீ. நீளம், 33 செ.மீ. அகலம் |
|
விளக்கம்
இச்செப்பேடு திருக்காளஹஸ்தியைச் சேர்ந்த சைவசிகாமணியான வயிரவநம்பியாபிள்ளை பொன்னம்பியார்க்கு திருவாசி என்ற கிராமமும் திருக்கோடீஸ்வரர் கொழக கோயில் பூசை உரிமையும், தேவதானம், தேவர் பணிகளும் அக்கோயில் ஆதிசண்டேஸ்வரர் பெயரால் பட்டயமாகக் கொடுக்கப்பட்டதைக் குறிக்கிறது. ஆதிசேது மடத்து முதலிகள், மாகேஸ்வரர், கோயிலார், அரசினர் (ராசகரம்), அஞ்சுதேசத்து பரிகல சனங்கள் ஆகியோர் கோடீஸ்வரர் கோயிலில் கூடி எடுத்த முடிவாக இவ்வுரிமை சொல்லப்படுகிறது. கடற்கரைப் பகுதி ஆதலால் தீவுகள், திட்டுகள், உப்பளங்கள், சேதுசாலை, சேதுமடம் முதலியவை சொல்லப்படுகின்றன. |
|
|
குறிச்சொல்
|
|
|
குறிப்புதவிகள்
தமிழகச் செப்பேடுகள்,தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னை. 2005
|
|
செப்பேடு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
-
IMAGE
7 Files
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 07 Sep 2017 |
| பார்வைகள் | 68 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 0 |