செப்பேடு
முத்துராமலிங்க விஜயரெகுநாத சேதுபதி செப்பேடு
| செப்பேட்டின் பெயர் | முத்துராமலிங்க விஜயரெகுநாத சேதுபதி செப்பேடு |
|---|---|
| செப்பேடு கிடைக்கப் பெற்ற இடம் | சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியகம் |
| ஊர் | எழும்பூர் |
| வட்டம் | அமைந்தகரை |
| மாவட்டம் | சென்னை |
| மொழியும்எழுத்தும் | தமிழ்-தமிழ் |
| அரசு/ஆட்சியாளர் | சேதுபதி / முத்துராமலிங்க விஜயரெகுநாத சேதுபதி |
| வரலாற்று ஆண்டு | கி.பி.1763 |
|
விளக்கம்
சந்திரசேகர அவதானி என்ற சான்றோருக்கு அரியக்குடி என்ற சிற்றூரினை சேதுபதி மன்னர் தானம் அளித்ததை இந்தச் செப்பேடு தெரிவிக்கின்றது. அவதானி எனப்படுவோர் மிகமிக வேகமாக செயல்படும் மனித நினைவாற்றலைக் கொண்டு கேட்போர் வினாக்களுக்கு இலக்கண இலக்கிய, இலௌகீக சம்பந்தமான பதில்களை, தயக்கமின்றி சரியாக தெரிவிப்பவர் ஆவார். இத்தகைய அவதானியான சந்திரசேகரருக்கு வழங்கப்பட்ட அரியக்குடி கிராமம் கிடாத்திருக்கை நாட்டில் அமைந்திருந்தது. இதற்கு கடம்பவன நல்லூர் என்ற பெயரும் வழங்கப்பட்டு வந்தது. |
|
|
குறிச்சொல்
|
|
|
குறிப்புதவிகள்
சேதுபதி மன்னர் செப்பேடுகள், டாக்டர் எஸ்.எம்.கமால், ஷர்மிளா பதிப்பகம்,
|
|
செப்பேடு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 15 Dec 2017 |
| பார்வைகள் | 48 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 0 |