Back
செப்பேடு
இடையன்வயல் கோபாலமடத்துச் செப்பேடு
செப்பேட்டின் பெயர் இடையன்வயல் கோபாலமடத்துச் செப்பேடு
செப்பேடு கிடைக்கப் பெற்ற இடம் இடையன் வயல்
ஊர் இடையன் வயல்
வட்டம் திருவாடானை
மாவட்டம் சிவகங்கை
மொழியும்எழுத்தும் தமிழ்-தமிழ்
அரசு/ஆட்சியாளர் சேதுபதி / கிழவன் ரெகுநாத சேதுபதி
வரலாற்று ஆண்டு கி.பி.1706
விளக்கம்

பெருமான்கோன் என்பவருக்கு கோபாலமடம் என்ற பெயரில் ஒரு மடத்தை நிறுவி அதனைப் பரிபாலனம் செய்வதற்காக இடையன் வயல் என்ற ஊரையும் மேலும் சில வருவாய்களையும் கொடுத்த செய்தி கூறப்பட்டுள்ளது. இடையன் வயல் ஊரைச் சுற்றி உப்பளங்கள் இருப்பதால் உப்பளங்களிலிருந்தும் மடத்துக்கு உப்பாக வருவாய் கொடுக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் சேது மார்க்கத்தில் அமைந்துள்ள அம்மடத்திலிருந்து யாத்திரிகர்களுக்கும் வழிப்போக்கர்களுக்கும் நீர்மோர், தபன கஞ்சி (சூடான கஞ்சி), உப்பு, ஊறுகாய் ஆகியவை கொடுக்கப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. இரண்டு ஏடுகளாக உள்ள இச்செப்பேட்டின் இறுதியில் முப்பது ஆண்டுகள் கழித்து, பெருமான்கோனுக்கு சருவமானியமாக மீண்டும் இத்தருமம் புதுப்பித்துத் தரப்பட்டுள்ள செய்தி கூறப்பட்டுள்ளது. இடையன்வயலில் “இராமர் பாதம்“ உள்ள கோயிலும், அருகில் ஒரு மடமும் சிதைந்த நிலையில் இன்று காணப்படுகிறது.

குறிச்சொல்
குறிப்புதவிகள்
இடையன்வயல் கோபாலமடத்துச் செப்பேடு
செப்பேடு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

  • IMAGE

    6 Files

  • TVA_CPS_00067_ஆழ்வார்...

  • TVA_CPS_00067_ஆழ்வார்...

  • TVA_CPS_00067_ஆழ்வார்...

  • TVA_CPS_00067_ஆழ்வார்...

  • TVA_CPS_00067_ஆழ்வார்...

  • TVA_CPS_00067_ஆழ்வார்...

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 07 Sep 2017
பார்வைகள் 53
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய செப்பேடு