செப்பேடு
குமாரமுத்துவிஜயரெகுநாத சேதுபதி காத்ததேவர் செப்பேடு
| செப்பேட்டின் பெயர் | குமாரமுத்துவிஜயரெகுநாத சேதுபதி காத்ததேவர் செப்பேடு |
|---|---|
| செப்பேடு கிடைக்கப் பெற்ற இடம் | திருவாவடுதுறை ஆதினம், திருவாவடுதுறை |
| ஊர் | திருவாவடுதுறை |
| வட்டம் | குத்தாலம் |
| மாவட்டம் | நாகப்பட்டினம் |
| மொழியும்எழுத்தும் | தமிழ்-தமிழ் |
| அரசு/ஆட்சியாளர் | சேதுபதி / குமாரமுத்துவிஜய ரகுநாத சேதுபதி காத்ததேவர் |
| அளவுகள் / பரிமாணங்கள் | 19.5 செ.மீ x 15 செ.மீ |
|
விளக்கம்
குமார முத்து விசைய ரெகுநாதச் சேதுபதி காத்த தேவரவர்கள் திருவாவடுதுறைப் பண்டாரச் சன்னதிக்கு மடப்புரமாக பொசுக்குடி என்ற ஊரினை தானமாக வழங்கியதை இச்செப்பேடு தெரிவிக்கின்றது. இந்த ஊருக்கான விரிவான எல்லைகள் செப்பேட்டில் குறிக்கப்படாமல் நஞ்சை, புஞ்சை, திட்டு, திடல், இடை, குடி, பள்ளு உட்பட சர்வமானியம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த செப்பேட்டினைப் பொறித்தவர் பெயர் குறிப்பிடப்படாமல் “ஸ்தலஸ்தபதி என்று மட்டும் குறிப்பிடப்பட்டிருப்பதால் இந்த செப்பேடு, சேதுபதி மன்னர் திருவாவடுதுறை மடத்துக்கு வருகை தந்தபோழுது அங்கேயே வழங்கப்பட்டிருக்க வேண்டும். |
|
|
குறிச்சொல்
|
|
|
குறிப்புதவிகள்
சேதுபதி மன்னர் செப்பேடுகள், டாக்டர் எஸ்.எம்.கமால், ஷர்மிளா பதிப்பகம்,
|
|
செப்பேடு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 14 Dec 2017 |
| பார்வைகள் | 57 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 0 |