தளவாய் சேதுபதி என்ற கூத்தன் சேதுபதி செப்பேடு
| செப்பேட்டின் பெயர் | தளவாய் சேதுபதி என்ற கூத்தன் சேதுபதி செப்பேடு |
|---|---|
| செப்பேடு கிடைக்கப் பெற்ற இடம் | இராமேசுவரம் இராமநாதசுவாமி கோயில் |
| ஊர் | இராமேசுவரம் |
| வட்டம் | இராமநாதபுரம் |
| மாவட்டம் | இராமநாதபுரம் |
| மொழியும்எழுத்தும் | தமிழ்-தமிழ் |
| அரசு/ஆட்சியாளர் | சேதுபதி / தளவாய் சேதுபதி என்ற கூத்தன் சேதுபதி |
| வரலாற்று ஆண்டு | கி.பி.1553 |
|
விளக்கம்
சேதுபதி மன்னருக்கு இராமேசுவரம் திருக்கோயிலில் பணி செய்து வந்த குருக்கள் சபையாரும் தமிழ் ஆரியரும் எழுதிக் கொடுத்த இசைவுமுறியாகும். இராமேசுவரம் திருக்கோயில் நடைமுறைகளை ஒழுங்காகவும் முறையாகவும் நிறைவேற்றி வைப்பதற்காக, திருக்கோயில் திருப்பணியாளர்கள் இணக்கம் தெரிவித்து வரைந்து வழங்கிய இந்தப்பிடி பாடு தளவாய் சேதுபதி மன்னருக்கும் எழுதப்பட்டுள்ளது. இந்தச் செப்பேட்டில் கண்ட மறவர் சீமை மன்னராக இருந்தவர் தளவாய் சேதுபதி என்ற கூத்தன் சேதுபதியாகும். மதுரை நாயக்க மன்னருக்கு கட்டுப்பட்ட தளவாயாக சேதுபதி மன்னர் இருந்ததால் அப்பொழுது ஆட்சியில் இருந்த திருமலை நாயக்கர் பெயரும், முறியின் வாசக அமைப்பு முறைக்காக சேர்க்கப்பட்டுள்ளது. |
|
|
குறிச்சொல்
|
|
|
குறிப்புதவிகள்
சேதுபதி மன்னர் செப்பேடுகள், டாக்டர் எஸ்.எம்.கமால், ஷர்மிளா பதிப்பகம்,
|
|
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 13 Dec 2017 |
| பார்வைகள் | 131 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 0 |