திருமலை ரகுநாத சேதுபதி செப்பேடு
| செப்பேட்டின் பெயர் | திருமலை ரகுநாத சேதுபதி செப்பேடு |
|---|---|
| செப்பேடு கிடைக்கப் பெற்ற இடம் | இராமேசுவரம் இராமநாதசுவாமி கோயில் |
| ஊர் | இராமேசுவரம் |
| வட்டம் | இராமநாதபுரம் |
| மாவட்டம் | இராமநாதபுரம் |
| மொழியும்எழுத்தும் | தமிழ்-தமிழ் |
| அரசு/ஆட்சியாளர் | சேதுபதி / திருமலை ரகுநாத சேதுபதி |
| வரலாற்று ஆண்டு | 3.1.1653 |
|
விளக்கம்
திருமலை சேதுபதி மன்னர், ஸ்ரீஇராமநாதசுவாமி தரிசனத்திற்கு இராமேசுவரம் திருக்கோயிலுக்கு சென்று இருந்த பொழுது அங்கு மன்னரது அறக்கட்டளையை கவனித்து வந்த காரியக்காரரைப் பற்றிய முறையீட்டைக் கேட்டவுடனேயே வழங்கிய ஆணையை இச்செப்பேடு குறிப்பிடுகிறது. இந்த ஆணையில் கோயில் ஆதினகர்த்தருக்கு சேதுநாட்டைத் தவிர மற்றைய மாநிலங்களில் இருந்தும் ஸ்ரீஇராமநாதசுவாமிக்கு காணிக்கைகள் வந்து கொண்டு இருந்தன என்பதும், அவைகள் கோயில் உள்துறைக் கட்டளையில் சேர்க்கப்பட்டு வந்தன என்பதும் இச்செப்பேட்டின் மூலம் தெரிகின்றது. இன்னொரு விளக்கமும் கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது அறக்கட்டளையில், அந்தந்த சேதுபதி மன்னர்கள் அளிக்கின்ற திரவியங்களையும், உபையங்களையும் தான் பெற்றுக் கொள்ள வேண்டுமே தரவி, அந்த மன்னர் முடிசூடும் பொழுது ஸ்ரீஇராமநாதசுவாமிக்கு முதன்மையாக வழங்குகிற பட்ட கிராமம் அல்லது பட்டகாணிக்கையை கோயில் உள்துறைக் கட்டளையில் தான் சேர்த்துக் கொள்ள வேண்டும். |
|
|
குறிச்சொல்
|
|
|
குறிப்புதவிகள்
சேதுபதி மன்னர் செப்பேடுகள், டாக்டர் எஸ்.எம்.கமால், ஷர்மிளா பதிப்பகம்,
|
|
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 13 Dec 2017 |
| பார்வைகள் | 51 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 0 |