செப்பேடு
தளவாய் சேதுபதி செப்பேடு
| செப்பேட்டின் பெயர் | தளவாய் சேதுபதி செப்பேடு |
|---|---|
| செப்பேடு கிடைக்கப் பெற்ற இடம் | இராமேசுவரம் இராமநாதசுவாமி கோயில் |
| ஊர் | இராமேசுவரம் |
| வட்டம் | இராமநாதபுரம் |
| மாவட்டம் | இராமநாதபுரம் |
| மொழியும்எழுத்தும் | தமிழ்-தமிழ் |
| அரசு/ஆட்சியாளர் | சேதுபதி / தளவாய் சேதுபதி |
| வரலாற்று ஆண்டு | 3.2.1631 |
|
விளக்கம்
இச்செப்பேட்டினை வழங்கியவர் தளவாய் சேதுபதி. இந்தச் செப்பேட்டின் காலத்தைக் கொண்டு இதனை வழங்கியவர் தளவாய் கூத்தன் சேதுபதி எனக்கொள்ளலாம். இராமேசுவரம் இராமநாதசுவாமிக்கு பட்ட காணிக்கையாக சேது மன்னர் மருதங்கநல்லூர் என்ற கிராமத்தை தானமாக வழங்கிய செய்தியை இச்செப்பேடு குறிப்பிடுகிறது. பட்டக் காணிக்கை என்பது சேதுபதி மன்னர் பட்டமேற்ற பிறகு தாம் வழிபடும் இறைவனுக்கு காணிக்கையாக வழங்குவது. இராமநாதசுவாமி கோயில் பருவதவர்த்தினி அம்மனுக்கு சந்தனக் காப்பு, மஞ்சள் காப்பு, திருவிளக்கு ஆகிய உபயங்களுக்காக இந்த ஊர் வழங்கப்பட்டுள்ளது. |
|
|
குறிச்சொல்
|
|
|
குறிப்புதவிகள்
சேதுபதி மன்னர் செப்பேடுகள், டாக்டர் எஸ்.எம்.கமால், ஷர்மிளா பதிப்பகம்,
|
|
செப்பேடு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 13 Dec 2017 |
| பார்வைகள் | 123 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 0 |