ஆனையார் கோட்டைச் செப்பேடு
| செப்பேட்டின் பெயர் | ஆனையார் கோட்டைச் செப்பேடு |
|---|---|
| செப்பேடு கிடைக்கப் பெற்ற இடம் | ஆனையார் கோட்டை |
| ஊர் | திருப்பனந்தாள் |
| வட்டம் | திருவிடைமருதூர் |
| மாவட்டம் | தஞ்சாவூர் |
| மொழியும்எழுத்தும் | தமிழ்-தமிழ், கிரந்தம் |
| அரசு/ஆட்சியாளர் | சிவகங்கை அரசர் / அரசு நிலையிட்ட விசைய ரகுநாதப் பெரிய உடையாத் தேவர் |
| வரலாற்று ஆண்டு | 22.6.1782 |
| அளவுகள் / பரிமாணங்கள் | 27.5 செ.மீ X 19.5 செ.மீ |
|
விளக்கம்
கைப்பிடியில் சிறிய அளவில் பிள்ளையார் சுழியும் அதன்கீழ் சிறு முத்தலைச் சூலமும் வரையப்பட்டுள்ளது. சிவகங்கை மன்னர் அரசு நிலையிட்ட விசைய ரகுநாதப் பெரிய உடையாத் தேவரவர்கள் காசியில் பிராமண போசனத்திற்காகவும் மகேசுவர பூசையாக அன்னதானம் செய்யவும் ஆணையார் கோட்டை, மச்சூர் ஆகிய கிராமங்களைக் கொடையாக விட்ட விபரம் இச்செப்பேட்டில் கூறப்படுகிறது. இரண்டு கிராமங்களுக்கும் விரிவான எல்லைகள் கூறப்படுகின்றன. சிவகங்கை அரச மரபினருக்குரிய மெய்க்கீர்த்திகள் சில கூறப்பட்டுள்ளன. அவற்றுள் சில இராமநாதபுரம் சேதுபதி அரசர்கட்கும் உரியவை. இச்செப்பேட்டிற்கு மற்றொரு நகலும் காசிமடத்தில் உள்ளது. |
|
|
குறிச்சொல்
|
|
|
குறிப்புதவிகள்
செ.இராசு, திருப்பனந்தாள் காசிமடத்துச் செப்பேடுகள், கொங்கு ஆய்வு மையம்,
|
|
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
-
IMAGE
11 Files
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 19 Dec 2017 |
| பார்வைகள் | 184 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 0 |