நந்தனூர் செப்பேடு
| செப்பேட்டின் பெயர் | நந்தனூர் செப்பேடு |
|---|---|
| செப்பேடு கிடைக்கப் பெற்ற இடம் | நந்தனூர் |
| ஊர் | நந்தனூர் |
| வட்டம் | கரூர் |
| மாவட்டம் | கரூர் |
| மொழியும்எழுத்தும் | தமிழ்-தமிழ் |
| வரலாற்று ஆண்டு | கி.பி.1777, 1775, 1773 |
| அளவுகள் / பரிமாணங்கள் | 27 செ.மீ. நீளம், 10 செ.மீ. அகலம் |
|
விளக்கம்
“அஞ்சூர் பிரவேசம்“ என்று இச்செப்பேடு தொடங்குகின்றது. அஞ்சூருக் கவுண்டர்கள் எனக் குறிப்பிட்டு ஆட்பெயர்கள் வேட்டுவன், கவுண்டன் என்ற பின்னொட்டுச் சொற்களுடன் கலந்து மாறி மாறி வருகின்றன. செப்பேட்டின் நோக்கம் என்னவென்பது தெளிவாக இல்லை. பல்வேறு பெயர்களில் நிலப்பெயர்களும் அவற்றின் அளவு ஏலை ஏலகுழி 1,2,3 என்ற எண்களில் ஒவ்வொரு திசையிலும் குறிக்கப்பட்டுள்ளன. ஒரு இடத்தில் “எல்லை தீருமானம் பண்ணித்தந்த படி“ என்றும் மற்றொரு இடத்தில் “மொஞ்சனூர்“ தஞ்சமநெல்லூர் எல்லைகொல்லை தீர்ந்த பிராகரம்“ என்றும் மற்றொரு இடத்தில் “மூன்று பேருங்கூடி அவசர அவசர நிமித்தியமாக வாங்கினது மூவாயிரம் பொன் வாங்கிக் கொண்டு“ ...“சம்மதிச்சு விட்டகாணி“ என்றும் சொற்றொடர்கள் உள்ளன. |
|
|
குறிச்சொல்
|
|
|
குறிப்புதவிகள்
தமிழகச் செப்பேடுகள்,தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னை. 2005
|
|
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
-
IMAGE
11 Files
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 07 Sep 2017 |
| பார்வைகள் | 52 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 0 |