செப்பேடு
முத்துராமலிங்க விஜயரெகுநாத சேதுபதி செப்பேடு
| செப்பேட்டின் பெயர் | முத்துராமலிங்க விஜயரெகுநாத சேதுபதி செப்பேடு |
|---|---|
| செப்பேடு கிடைக்கப் பெற்ற இடம் | இராமநாதபுரம் இராமலிங்க விலாசம் அரண்மனை அருங்காட்சியகம் |
| ஊர் | இராமநாதபுரம் நகர் |
| வட்டம் | இராமநாதபுரம் |
| மாவட்டம் | இராமநாதபுரம் |
| மொழியும்எழுத்தும் | தமிழ்-தமிழ் |
| அரசு/ஆட்சியாளர் | சேதுபதி / முத்துராமலிங்க விஜயரெகுநாத சேதுபதி |
| வரலாற்று ஆண்டு | 13.1.1782 |
|
விளக்கம்
இராமநாதபுரம் கோட்டைக்குக் கிழக்கே இரண்டு கல் தொலைவிலுள்ள லட்சுமிபுரத்தில் முத்துராமலிங்க சுவாமி கோயில் அமைந்துள்ளது. இதனை எடுப்பித்தவர் முத்துவிஜயரெகுநாத சேதுபதி ஆவார். அம்மன்னர் நாள்தோறும் இராமேசுவரம் திருக்கோயிலுக்குச் செல்ல இயலாத நிலையில், இராமேசுவரம் இறைவனை இராமநாதபுரத்திலேயே பூஜிப்பதற்காக இந்தக் கோயிலை நிறுவினார். இந்தக் கோயிலின் பராமரிப்புக்காக சொக்கானை, மத்தி வயல் என்ற இரு கிராமங்களை சர்வமான்யமாக வழங்கியுள்ளதை இந்தச் செப்பேடு தெரிவிக்கின்றது. |
|
|
குறிச்சொல்
|
|
|
குறிப்புதவிகள்
சேதுபதி மன்னர் செப்பேடுகள், டாக்டர் எஸ்.எம்.கமால், ஷர்மிளா பதிப்பகம்,
|
|
செப்பேடு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 18 Dec 2017 |
| பார்வைகள் | 69 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 0 |