முத்து வயிரவநாதத் தேவர் செப்பேடு
| செப்பேட்டின் பெயர் | முத்து வயிரவநாதத் தேவர் செப்பேடு |
|---|---|
| செப்பேடு கிடைக்கப் பெற்ற இடம் | அழகர் திருக்கோயில் தேவஸ்தானம் |
| ஊர் | அழகர்கோயில் |
| வட்டம் | மேலூர் |
| மாவட்டம் | மதுரை |
| மொழியும்எழுத்தும் | தமிழ்-தமிழ் |
| அரசு/ஆட்சியாளர் | சேதுபதி / முத்து வயிரவநாதத் தேவர் |
| வரலாற்று ஆண்டு | 22.7.1712 |
|
விளக்கம்
முத்து வயிரவநாதத் தேவரால் அழகர் திருமலையைச் சேர்ந்த உபய வேதாந்தாச்சாரியான திருமலையாண்ட திருவேங்கடாச்சாரியார் என்பவருக்கு வழங்கப்பட்ட கொடையாக இச்செப்பேடு விளங்குகின்றது. அழகர் மலையில் அன்னதாம் மேற்கொள்ளவும் அங்கு வருகை தருகின்ற பயணிகளுக்கு உபயோகமாக அழகர்கோயிலிலும், அப்பன் திருப்பதி என்ற இடத்திலும் ஊரணி தர்மம் ஏற்படுத்தவும், ஆய்க்குடி சுந்தனாவூர் ஆகிய இரண்டு கிராமங்களை தானம் வழங்கியதை இந்தச் செப்பெடு தெரிவிக்கின்றது. சித்திரைப் பெருந்திருவிழாவின் போது அழகர் மதுரைக்கு எழுந்தருளுவதை ஒட்டி அங்கு கூடுகின்ற பெருந்திரளான மக்களது நன்மைக்காக இந்த தர்மம் ஏற்படுத்தப்பட்டது. |
|
|
குறிச்சொல்
|
|
|
குறிப்புதவிகள்
சேதுபதி மன்னர் செப்பேடுகள், டாக்டர் எஸ்.எம்.கமால், ஷர்மிளா பதிப்பகம்,
|
|
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 18 Dec 2017 |
| பார்வைகள் | 59 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 0 |