முத்துராமலிங்க விஜயரெகுநாத சேதுபதி செப்பேடு
| செப்பேட்டின் பெயர் | முத்துராமலிங்க விஜயரெகுநாத சேதுபதி செப்பேடு |
|---|---|
| செப்பேடு கிடைக்கப் பெற்ற இடம் | திருப்புல்லாணி |
| ஊர் | திருப்புல்லாணி |
| வட்டம் | இராமநாதபுரம் |
| மாவட்டம் | இராமநாதபுரம் |
| மொழியும்எழுத்தும் | தமிழ்-தமிழ் |
| அரசு/ஆட்சியாளர் | சேதுபதி / முத்துராமலிங்க விஜயரெகுநாத சேதுபதி |
| வரலாற்று ஆண்டு | 24.4.1782 |
| அளவுகள் / பரிமாணங்கள் | 29 செ.மீ x 16 செ.மீ |
|
விளக்கம்
இந்தச் செப்பேட்டை சேதுபதி மன்னர் நாகாச்சி மட தர்மத்திற்காக பேய்ராமத்தேவனேந்தல் என்ற ஊரினை தானமாக புருஷோத்தம பண்டிதர் என்பவர் கையில் கொடுத்ததாகத் தெரிகிறது. இராமேசுவரம் தலயாத்திரை வருகின்ற பக்தகோடிகள் வடக்கில் இருந்து வந்து வங்கக் கடற்கரையில் உள்ள ஆத்தங்கரைச் சத்திரத்தில் தங்கியபிறகு கிழக்கு நோக்கி கடற்கரை வழயாக பிள்ளைமடம் சத்திரத்தைக் கடந்து மண்டபம் தோணித்துறைக்குச் செல்லுதல் வேண்டும். ஆற்றங்கரை சுழி முகத்தில் வைகையாறு சங்கமிப்பதால் முகத்துவாரத்தை கால்நடையாக கால்காலத்தில் கடப்பது ஆபத்தாக இருந்து வந்தது. இதனைத் தவிர்ப்பதற்காக கிழக்கே செல்லாமல் ஆற்றங்கரையில் தெற்கே சிறிது தொலைவு சென்று வைகையாற்றைப் படகு மூலம் கடப்பது எளிதாக இருந்தது. அவ்விதம் வருபவர்களுக்கு நாகாச்சிமடம் மிகவும் பயனுள்ள தங்குமிடமாக அமைந்திருந்தது. அங்கு களைப்பாறும் பயணிகளுக்கு உணவு இருப்பிட வசதி கொடுப்பதற்காக சேதுபதி மன்னர் இந்த தானத்தை வழங்கியுள்ளார். இந்த மடம் இப்பொழுது மடம் இல்லை. |
|
|
குறிச்சொல்
|
|
|
குறிப்புதவிகள்
சேதுபதி மன்னர் செப்பேடுகள், டாக்டர் எஸ்.எம்.கமால், ஷர்மிளா பதிப்பகம்,
|
|
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
-
IMAGE
10 Files
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 18 Dec 2017 |
| பார்வைகள் | 156 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 0 |