குமாரமுத்துவிஜயரெகுநாத சேதுபதி காத்ததேவர் செப்பேடு
| செப்பேட்டின் பெயர் | குமாரமுத்துவிஜயரெகுநாத சேதுபதி காத்ததேவர் செப்பேடு |
|---|---|
| செப்பேடு கிடைக்கப் பெற்ற இடம் | புதுமடம் |
| ஊர் | இராமநாதபுரம் நகர் |
| வட்டம் | இராமநாதபுரம் |
| மாவட்டம் | இராமநாதபுரம் |
| மொழியும்எழுத்தும் | தமிழ்-தமிழ் |
| அரசு/ஆட்சியாளர் | சேதுபதி / குமாரமுத்துவிஜய ரகுநாத சேதுபதி காத்ததேவர் |
| வரலாற்று ஆண்டு | 14.1.1734 |
|
விளக்கம்
இராமநாதபுரம் நகரிலுள்ள ஈசா பள்ளிவாசலுக்கு அன்னதானக் கட்டளைக்கு நிலக்கொடையாக கிழவனேரி என்ற கிராமம் வழங்கப்பட்டதை இச்செப்பேடு தெரிவிக்கின்றது. இந்த அறக்கொடையைப் பெற்ற ஈசா பள்ளிவாசல் என்ற அமைப்பு இராமநாதபுரம் நகராட்சிப் பகுதி பெரிய கடைத் தெருவின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ளது. ஈசா சாஹிபு என்ற இறையருட்செல்வர் பள்ளிவாசலை ஒட்டி அடக்கம் பெற்றுள்ளார். இந்த புனித இடத்திற்கு வருகை தருகின்ற ஆன்மீக பெருமக்களுக்கு அன்னம் வழங்குவதற்காக இந்தச் சேதுபதி மன்னர் கிழவனேரி என்ற ஊரினைக் கொடையாக நல்கியது சமயப்பொறையுடைமையைக் காட்டுகிறது. |
|
|
குறிச்சொல்
|
|
|
குறிப்புதவிகள்
சேதுபதி மன்னர் செப்பேடுகள், டாக்டர் எஸ்.எம்.கமால், ஷர்மிளா பதிப்பகம்,
|
|
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
-
IMAGE
10 Files
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 15 Dec 2017 |
| பார்வைகள் | 52 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 0 |