மேலப்பனையூர் செப்பேடு
| செப்பேட்டின் பெயர் | மேலப்பனையூர் செப்பேடு |
|---|---|
| செப்பேடு கிடைக்கப் பெற்ற இடம் | மேலப்பனையூர் |
| ஊர் | மேலப்பனையூர் |
| வட்டம் | திருமயம் |
| மாவட்டம் | புதுக்கோட்டை |
| மொழியும்எழுத்தும் | தமிழ்-தமிழ் |
| வரலாற்று ஆண்டு | கி.பி.18-ஆம் நூற்றாண்டு |
|
விளக்கம்
வென்று மாலையிட்டான் என்பவன் குழிபிறையில் நாகமாணிக்கத்தாள் அழகிய நல்லாள் என்ற பெண்ணுடன் (தேவரடியாள்) கூடியிருந்தான். அப்பொழுது அவ்வூர் பிடாரி கோயிலில் திருவிழா நிகழ்ந்தது. தெய்வத்தை இருவரும் வழிபடச் சென்ற போது வென்று மாலையிட்டான் இறந்து போனான். அதனால் நாகமாணிக்கத்தாள் உடன்கட்டை ஏறித் தன்னுயிர் மாய்த்துக் கொண்டாள். ஊரில் உள்ள நான்கு வகையான மக்களும் கூடி, வென்று மாலையிட்டான் காணியில் நாலில் ஒரு பங்கினை அவளது நினைவாகக் கோயிலுக்குக் கொடுத்துள்ளனர். வாகை மங்கலமான குழிபிறையின் நிலத்தரசுகளாகக் கார்காத்த வேளார் குறிப்பிடப்படுகின்றனர். |
|
|
குறிச்சொல்
|
|
|
குறிப்புதவிகள்
தமிழகச் செப்பேடுகள்,தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னை. 2005
|
|
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
-
IMAGE
10 Files
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 07 Sep 2017 |
| பார்வைகள் | 111 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 0 |