சேதுபதி மன்னரது தமயனார் முத்து வயிரவநாதத் தேவர் செப்பேடு
| செப்பேட்டின் பெயர் | சேதுபதி மன்னரது தமயனார் முத்து வயிரவநாதத் தேவர் செப்பேடு |
|---|---|
| செப்பேடு கிடைக்கப் பெற்ற இடம் | இராமநாதபுரம் இராமலிங்க விலாசம் அரண்மனை அருங்காட்சியகம் |
| ஊர் | இராமநாதபுரம் நகர் |
| வட்டம் | இராமநாதபுரம் |
| மாவட்டம் | இராமநாதபுரம் |
| மொழியும்எழுத்தும் | தமிழ்-தமிழ் |
| அரசு/ஆட்சியாளர் | சேதுபதி / முத்து வயிரவநாதத் தேவர் |
| வரலாற்று ஆண்டு | கி.பி.1711 |
|
விளக்கம்
கி.பி.1710-இல் ரெகுநாத கிழவன் சேதுபதி காலமான பொழுது ஏற்பட்ட அரசியல் நெருக்கடியினால் அவரது தங்கை மக்களில் மூத்தவரான முத்து வயிரவ நாதத் தேவர் புறக்கணிக்கப்பட்டு, இளையவரான திருவுடையாத் தேவர், விஜயரகுநாத சேதுபதியாக பட்டம் சூட்டப்பெற்றார். என்றாலும், முத்து வயிரவ நாதத் தேவர் தமது தம்பியின் ஆட்சிக் காலத்தில் மிகவும் பொறுப்பான பதவி ஒன்றிலிருந்து இந்தச் செப்பேட்டினை வழங்கியுள்ளார். கிடாரம் கொண்டான் என்ற மறவர்சீமை ஊரினைச் சேர்ந்த சாந்தப் பிள்ளை மகன் சர்க்கரைப் புலவருக்கு கோடகுடி கொந்தலான் வயல் என்ற ஊரினை தானம் வழங்கியதை இந்தச் செப்பேடு தெரிவிக்கின்றது. |
|
|
குறிச்சொல்
|
|
|
குறிப்புதவிகள்
சேதுபதி மன்னர் செப்பேடுகள், டாக்டர் எஸ்.எம்.கமால், ஷர்மிளா பதிப்பகம்,
|
|
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 18 Dec 2017 |
| பார்வைகள் | 48 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 0 |