முத்துவிஜயரெகுநாத சேதுபதி செப்பேடு
| செப்பேட்டின் பெயர் | முத்துவிஜயரெகுநாத சேதுபதி செப்பேடு |
|---|---|
| செப்பேடு கிடைக்கப் பெற்ற இடம் | இராமநாதபுரம் இராமலிங்க விலாசம் அரண்மனை அருங்காட்சியகம் |
| ஊர் | இராமநாதபுரம் நகர் |
| வட்டம் | இராமநாதபுரம் |
| மாவட்டம் | இராமநாதபுரம் |
| மொழியும்எழுத்தும் | தமிழ்-தமிழ் |
| அரசு/ஆட்சியாளர் | சேதுபதி / முத்துவிஜய ரகுநாத சேதுபதி |
|
விளக்கம்
இராமேசுவரத்தில் சுக்கிரவார நாள் அன்று சுவாமி சன்னதி, விஸ்வநாத சன்னதி, அம்மன் சன்னதி ஆகிய சன்னதிகளில் உண்டியலில் கிடைக்கின்ற ஆதாயமும், ருத்ராபிஷேகம், பஞ்சாமிர்தம் பட்டு, பருத்தி, பொன், வெள்ளி, பொட்டுக்காரை ஆகிய உபயங்களும் இராமேசுவரம் தலத்தில் உள்ள சேதுமாகாளியம்மன், நம்பு நாச்சியம்மன் கோயில்களில் கிடைக்கின்ற உபயங்களும் சேதுமன்னர் வழங்கும் காணிக்கைகளும் பட்டர்மார் ஆண்டுதோறும் அளிக்கின்ற அறுபது பொன்னும் அந்த வகையில் கிடைக்கின்ற அபராதத் தொகையும் கடற்கரையில் தோணிகளுக்கு கடவுச் சீட்டு கொடுப்பதன் மூலமும் பாடி காவல் தரகன் சுதந்திரம் ஆகிய ஆதாயங்கள் அனைத்தையும் இந்தக் கட்டளைக்கு பயன்படுத்துமாறு இந்தச் செப்பேட்டில் குறிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆடித்திருநாள், கோயில் பரிவட்டச் சுதந்திரமும், மண்டகப்படி பரிவட்டச் சுதந்திரமும் இராமேசுவரத்தை அடுத்துள்ள தோப்புகள், கொல்லைகள், தந்தவனங்கள், தரவை ஆகியவைகளிலிருந்தும் சேமனூர் கிராமத்து தநிலங்களிலிருந்து வரப்படும் வருமானங்களையும் இந்தக் கட்டளைக்குப் பயன்படுத்த மன்னர் அனுமதி வழங்கியிருந்தார். |
|
|
குறிச்சொல்
|
|
|
குறிப்புதவிகள்
சேதுபதி மன்னர் செப்பேடுகள், டாக்டர் எஸ்.எம்.கமால், ஷர்மிளா பதிப்பகம்,
|
|
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
-
IMAGE
10 Files
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 13 Dec 2017 |
| பார்வைகள் | 43 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 0 |