சிதம்பரம் புதுமடம் செப்பேடு
| செப்பேட்டின் பெயர் | சிதம்பரம் புதுமடம் செப்பேடு |
|---|---|
| செப்பேடு கிடைக்கப் பெற்ற இடம் | சிதம்பரம் புதுமடம் |
| ஊர் | திருப்பனந்தாள் |
| வட்டம் | திருவிடைமருதூர் |
| மாவட்டம் | தஞ்சாவூர் |
| மொழியும்எழுத்தும் | தமிழ்-தமிழ், கிரந்தம் |
| அரசு/ஆட்சியாளர் | தஞ்சை மராட்டியர் / சகசி (1684-1711) |
| வரலாற்று ஆண்டு | 21.1.1711 |
| அளவுகள் / பரிமாணங்கள் | 26 செ.மீ x 18 செ.மீ |
|
விளக்கம்
சிதம்பரம், “வடகரை ராசாதி ராச வளநாட்டு வெண்ணையூர் நாட்டு வழுதலம்பட்டுச் சாவடியில்“ இருப்பதாகக் குறிக்கப் பெற்றுள்ளது. சிதம்பரம் “தனியூர் பெரும்பற்றப்புலியூர்“ என்றும், “பூலோக கயிலாயம்“ என்றும் கூறப்படுகிறது. கி.பி.1711 ஆம் ஆண்டு மன்னன் சகசியின் ஆட்சிக்காலத்தில் வடகரையில் உள்ள புதுமடத்தில் திருவாதிரையன்று பௌர்ணமியை ஒட்டிவரும் பிரதோஷ காலத்தில் அபிடேகம், நைவேத்தியம், திருவிளக்கு, திருமாலை, திருநந்தவனம், மகேசுவர பூசை, துவாதசி வட்டம், பிராமண போசனம், பிச்சை கரபாத்திரம் ஆகியவற்றுக்காகச் சீகாழிச்சீமை ஏழு மாகாணத்து நாட்டாரும் பெரிய வகுப்பு, சின்ன வகுப்பு உட்படக் குடியான பேர் அனைவரும் கொடைச் சாசனம் எழுதித் தந்தனர். |
|
|
குறிச்சொல்
|
|
|
குறிப்புதவிகள்
செ.இராசு, திருப்பனந்தாள் காசிமடத்துச் செப்பேடுகள், கொங்கு ஆய்வு மையம்,
|
|
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
-
IMAGE
8 Files
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 19 Dec 2017 |
| பார்வைகள் | 294 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 2 |