மேல்சேவூர் செப்பேடு
| செப்பேட்டின் பெயர் | மேல்சேவூர் செப்பேடு |
|---|---|
| செப்பேடு கிடைக்கப் பெற்ற இடம் | மேல்சேவூர் அருள்மிகு ரிஷபேஸ்வரர் கோயில் |
| ஊர் | மேல்சேவூர் |
| வட்டம் | செஞ்சி |
| மாவட்டம் | விழுப்புரம் |
| மொழியும்எழுத்தும் | தமிழ்-தமிழ் |
| வரலாற்று ஆண்டு | கி.பி.17-ஆம் நூற்றாண்டு |
|
விளக்கம்
சிதம்பரம் பதஞ்சலி மேலைமடம், பிட்சாமடம் ஆகியவற்றின் தலைவரான சிவாசாரியாரும், திருக்கண்ணபுரம் எச்சாராய்ய ஆசாரியாரும், தங்களது சிஷ்யர்களான உலகமாதேவிபுரம் (உலகாபுரம்) 24 கோத்திரத்துச் செட்டிகளை அழைத்து, அச்செட்டிகளுக்கு ஆபத்து ஏற்பட்டபோது சேவூர் இறைவன் தானும் ஒரு செட்டியாய் வந்து ஆபத்தைத் தடுத்து சிறை மீட்டார் என்றும் அவரை செட்டிகள் மறந்துவிட்டனர் என்றும் கூறி, மீண்டும் சேவூர் இறைவனுக்கு நின்றுபோன திருவிழா, வழிபாடுகளை நடத்த வேண்டும் என்று குறுிப்பிட்டனர். அதன்படி செட்டிகள் வருடா வருடம் தலைக்கட்டுக்கு 1/2 பணம், கலியாண முகூர்த்தத்தில் 5 பணம், தானப்பணம் 1, திருச்சினத்துக்கு ஒரு பணம் என வசூலித்துக் கொடுத்து சேவூர் இரங்கி மீட்ட சுவாமியார்க்கு தினப்படி வழிபாடு திருவிழா நடத்த ஏற்பாடு செய்தனர் என்ற செய்தியை இச்செப்பேடு குறிப்பிடுகிறது. |
|
|
குறிச்சொல்
|
|
|
குறிப்புதவிகள்
தமிழகச் செப்பேடுகள்,தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னை. 2005
|
|
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
-
IMAGE
5 Files
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 07 Sep 2017 |
| பார்வைகள் | 181 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 0 |