தீபாம்பாள்புரம் வன்மீகநாதர் கோயில் செப்பேடு
| செப்பேட்டின் பெயர் | தீபாம்பாள்புரம் வன்மீகநாதர் கோயில் செப்பேடு |
|---|---|
| செப்பேடு கிடைக்கப் பெற்ற இடம் | தீபாம்பாள்புரம் |
| ஊர் | தீபாம்பாள்புரம் |
| வட்டம் | பாபநாசம் |
| மாவட்டம் | தஞ்சாவூர் |
| மொழியும்எழுத்தும் | தமிழ், வடமொழி - தமிழ், கிரந்தம் |
| அரசு/ஆட்சியாளர் | தஞ்சை மராட்டியர் / தீபாம்பாள் பாயி |
| வரலாற்று ஆண்டு | 22.7.1713 |
| அளவுகள் / பரிமாணங்கள் | 22 செ.மீ x 13.5 செ.மீ |
|
விளக்கம்
சங்க காலத்திலிருந்து சிறப்புடன் விளங்கிய கோயில்வெண்ணியில் வாழ்ந்த அந்தணர்கள் அனைவரும் தங்களுக்கு உரித்தான கரம்பை நிலத்தைத் தீபாம்பாள்புரம் வன்மீகநாதர் தியாகராச சுவாமி மங்கள நாயகிக்கு அர்த்தசாமக் கட்டளைக்காகக் கொடையாக விட்டனர். 14 அடிக் கோலால் அளந்து எட்டு வேலி நிலம் கொடையாகக் கொடுக்கப்பட்டது. கொடுத்த நிலத்திற்கு எல்லைகளும் கூறப்பட்டுள்ளன. இந்தச் செப்பேட்டை எழுதியவர் அயோத்திராமன் என்பவர் ஆவார். வெங்கிட்டண அய்யங்கார், கிருட்டிணன், வருதன், இராகவன், கோதண்டய்யங்கார், இராசகோபாலய்யன், நீலமேகன், ஆண்டமார் குப்பன் ஆகியோர் சாட்சிக் கையொப்பம் இட்டுள்ளனர். |
|
|
குறிச்சொல்
|
|
|
குறிப்புதவிகள்
செ.இராசு, தஞ்சை மராட்டியர் கல்வெட்டுக்கள், தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்
|
|
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
-
IMAGE
5 Files
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 28 Dec 2017 |
| பார்வைகள் | 169 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 0 |