சிவகுமார முத்துவிஜயரெகுநாத சேதுபதி காத்ததேவர் செப்பேடு
| செப்பேட்டின் பெயர் | சிவகுமார முத்துவிஜயரெகுநாத சேதுபதி காத்ததேவர் செப்பேடு |
|---|---|
| செப்பேடு கிடைக்கப் பெற்ற இடம் | இராமேசுவரம் ஆபில் காபில் தர்கா |
| ஊர் | இராமேசுவரம் |
| வட்டம் | இராமநாதபுரம் |
| மாவட்டம் | இராமநாதபுரம் |
| மொழியும்எழுத்தும் | தமிழ்-தமிழ் |
| அரசு/ஆட்சியாளர் | சேதுபதி / சிவகுமாரமுத்துவிஜய ரகுநாத சேதுபதி காத்ததேவர் |
| வரலாற்று ஆண்டு | 9.5.1745 |
|
விளக்கம்
இச்செப்பேடு சேதுபதி மன்னரால் ஆபில் காபில் பள்ளிவாசலுக்கு கொடையளிக்கப்பட்டதைக் கூறுகின்றது. செப்பேட்டில் உள்ளபடி இது பள்ளவாசல் அல்ல. தர்கா ஆகும். பள்ளிவாசல் இசுலாமியர்களின் வழிபாட்டுத் தலமாகும். இசுலாமியப் பெரியவர்களது புனித இடங்களை தர்கா பள்ளிவாசல் என்றே குறிப்பிடுவது வட்டார வழக்காகும். ஆபில் காபில் பள்ளிவாசலுக்கு புதுக்குளம் என்ற கிராமம் கொடையாக அளிக்கப்பட்தை இச்செப்பேடு தெரிவிக்கின்றது. இந்தச் செப்பேட்டின் இறுதிப்பகுதியில் இந்த தருமத்திற்கு “தமிழனாகிலும் நாலா வர்ணத்திலே உள்ளவனாகிலும் இஸ்லாமானவனாகிலும்“ “கங்கையிலும் சேதுவிலும் மக்க, மதினத்திலும் என காப்புரை வாசகங்கள் சேர்க்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது ஆகும். |
|
|
குறிச்சொல்
|
|
|
குறிப்புதவிகள்
சேதுபதி மன்னர் செப்பேடுகள், டாக்டர் எஸ்.எம்.கமால், ஷர்மிளா பதிப்பகம்,
|
|
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
-
IMAGE
12 Files
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 15 Dec 2017 |
| பார்வைகள் | 55 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 0 |