முத்துவிஜயரெகுநாத சேதுபதி செப்பேடு
| செப்பேட்டின் பெயர் | முத்துவிஜயரெகுநாத சேதுபதி செப்பேடு |
|---|---|
| செப்பேடு கிடைக்கப் பெற்ற இடம் | இராமநாதபுரம் இராமலிங்க விலாசம் அரண்மனை அருங்காட்சியகம் |
| ஊர் | இராமநாதபுரம் நகர் |
| வட்டம் | இராமநாதபுரம் |
| மாவட்டம் | இராமநாதபுரம் |
| மொழியும்எழுத்தும் | தமிழ்-தமிழ் |
| அரசு/ஆட்சியாளர் | சேதுபதி / முத்துவிஜய ரகுநாத சேதுபதி |
| அளவுகள் / பரிமாணங்கள் | 22 செ.மீ x 14.5 செ.மீ |
|
விளக்கம்
சேதுபதிச் சீமையின் கோ நகராக விளங்கிய இராமநாதபுரம் கோட்டையின் தென்பகுதியில் அமைந்து இருப்பது கோதண்டராமசுவாமி ஆலயம். இந்தச் செப்பேட்டை வழங்கிய சேதுபதி மன்னர் இக்கோயிலின் அன்றாட பூசை, அபிஷேகம், நைவேத்தியம், திருமாலை, திருவிளக்கு ஆகியத் திருப்பணிகளுக்கும், திருவிழாவிற்குமாக இந்த கொடையை வழங்கியுள்ளார். மன்னரும் அவரது உறவினர்களும் ஆண்டுதோறும் ஐந்நூறு கலம் நெல் இந்தக் கோயிலுக்கு வரிசைக் கட்டளையாக வழங்குவதற்கு ஏற்பாடு செய்ததுடன் மன்னரது குடிகளும் வருட மகமையாக ஒரு பணமும், இடையர்கள் கோபாலக் கட்டளையாக திருமணத்தின் பொழுது ஐந்துபடி நெய்யும் இந்தக் கோயிலுக்குக் கொடுத்து வருமாறு உத்தரவிட்டுள்ளார். |
|
|
குறிச்சொல்
|
|
|
குறிப்புதவிகள்
சேதுபதி மன்னர் செப்பேடுகள், டாக்டர் எஸ்.எம்.கமால், ஷர்மிளா பதிப்பகம்,
|
|
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
-
IMAGE
11 Files
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 13 Dec 2017 |
| பார்வைகள் | 62 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 0 |