திருமலை ரகுநாத சேதுபதி செப்பேடு
| செப்பேட்டின் பெயர் | திருமலை ரகுநாத சேதுபதி செப்பேடு |
|---|---|
| செப்பேடு கிடைக்கப் பெற்ற இடம் | இராமநாதபுரம் இராமலிங்க விலாசம் அரண்மனை அருங்காட்சியகம் |
| ஊர் | இராமநாதபுரம் நகர் |
| வட்டம் | இராமநாதபுரம் |
| மாவட்டம் | இராமநாதபுரம் |
| மொழியும்எழுத்தும் | தமிழ்-தமிழ் |
| அரசு/ஆட்சியாளர் | சேதுபதி / திருமலை ரகுநாத சேதுபதி மன்னர் |
| வரலாற்று ஆண்டு | 19.1.1671 |
| அளவுகள் / பரிமாணங்கள் | 29.5. செ.மீ x 8.5 செ.மீ |
|
விளக்கம்
திருமலை இரகுநாத சேதுபதி மன்னர் இராமநாதபுரம் சீமையில் உள்ள பெருங்கரை கிராமத்து அட்டாலைச் சொக்கநாதர் ஆலயத்திற்கும் அதே ஊரில் உள்ள் தெய்வராயன் மடத்திற்கும், தானமாக கொத்தங்குளம் என்ற கிராமத்தை கொடுத்ததை இந்தச் செப்பேடு குறிப்பிடுகிறது. கி.பி.1672-இல் அந்த இடத்தில் தெய்வராயபிள்ளையும் அவர் மனைவியும் கல்லாலும் செங்கல்லாலும் திருக்கோயில் அமைத்து “சம்புரோச்சனை சோடச உபகாரம், நித்திய திரிகால பூஜை, அன்னதானம் உண்டாக்கினார்கள் என்று தெரிகிறது. மேலும் தெய்வராயன் பிள்ளை முதலில் மடத்தை ஏற்படுத்தி இருந்தார் என்பது செப்பேட்டில் இருந்து தெரிகிறது. |
|
|
குறிச்சொல்
|
|
|
குறிப்புதவிகள்
சேதுபதி மன்னர் செப்பேடுகள், டாக்டர் எஸ்.எம்.கமால், ஷர்மிளா பதிப்பகம்,
|
|
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 13 Dec 2017 |
| பார்வைகள் | 127 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 0 |