செல்லமுத்து விஜயரெகுநாத சேதுபதி காத்ததேவர் செப்பேடு
| செப்பேட்டின் பெயர் | செல்லமுத்து விஜயரெகுநாத சேதுபதி காத்ததேவர் செப்பேடு |
|---|---|
| செப்பேடு கிடைக்கப் பெற்ற இடம் | இராமநாதபுரம் இராமலிங்க விலாசம் அரண்மனை அருங்காட்சியகம் |
| ஊர் | இராமநாதபுரம் நகர் |
| வட்டம் | இராமநாதபுரம் |
| மாவட்டம் | இராமநாதபுரம் |
| மொழியும்எழுத்தும் | தமிழ்-தமிழ் |
| அரசு/ஆட்சியாளர் | சேதுபதி / செல்லமுத்து விஜய ரகுநாத சேதுபதி காத்ததேவர் |
| வரலாற்று ஆண்டு | 7.8.1755 |
| அளவுகள் / பரிமாணங்கள் | 26 செ.மீ x 17.5 செ.மீ |
|
விளக்கம்
குமாரமுத்து விசயரெகுநாத சேதுபதி ஆட்சிக்காலத்தில் அமைத்துதவிய மடம், சாருவூரனேந்தல் கிராமத்தில் பழுதடைந்திருந்ததால் அதனையும், அதனையொட்டிய ஊரணியையும் பரிபாலனம் பண்ணிவிக்க, செல்லமுத்து விசயரெகுநாத சேதுபதி மன்னரால் சாருவூரனேந்தலைச் சேர்ந்த பள்ள உலகாண்டி என்பவருக்கு இந்தச் செப்பேடு வழங்கப்பட்டுள்ளது. இந்த மடத்தினை பரிபாலனம் செய்வதற்காக அதே ஊரில் பதின்கல விரையடி நிலம் அவரிடம் கையளிக்கப்பட்டதையும் இந்தச் செப்பேடு தெரிவிக்கின்றது. இந்நிலத்திற்கான நான்கெல்லைகளும், அந்த நிலத்திலிருந்து மன்னருக்கு இறுக்கப்பட்ட வரியிறை, எச்சோறு, வரிச்சோறு, ஆடோட்டி, மாடோட்டி ஆகியவைகளும் இந்தச் செப்பேட்டில் குறிக்கப்பட்டுள்ளன. இந்த தர்மத்துக்காக அனைத்து கிராமங்களிலும் குடி ஒன்றுக்கு இரண்டு படி நெல் அளந்து கொடுக்கவும் மன்னர் கட்டளையிட்டுள்ளார். |
|
|
குறிச்சொல்
|
|
|
குறிப்புதவிகள்
சேதுபதி மன்னர் செப்பேடுகள், டாக்டர் எஸ்.எம்.கமால், ஷர்மிளா பதிப்பகம்,
|
|
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 15 Dec 2017 |
| பார்வைகள் | 72 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 0 |