Back
வழிபாட்டுத் தலம்
திருமணிக்கூடம் மணிக்குடி நாயகன் கோயில்
வழிபாட்டுத் தலத்தின் பெயர் திருமணிக்கூடம் மணிக்குடி நாயகன் கோயில்
வேறு பெயர்கள் திருமணிக்கூடம்
ஊர் திருமணிக்கூடம்
வட்டம் சீர்காழி
மாவட்டம் நாகப்பட்டினம்
உட்பிரிவு 2
மூலவர் பெயர் வரதராஜப்பெருமாள், மணிக்கூட நாயகன்
தாயார் / அம்மன் பெயர் திருமாமகள் நாச்சியார்
திருக்குளம் / ஆறு சந்திரபுஷ்கரணி
வழிபாடு நான்கு கால பூசை
திருவிழாக்கள் தை அமாவாசை, கருடசேவை
காலம் / ஆட்சியாளர் கி.பி.8-9-ஆம் நூற்றாண்டு
சுவரோவியங்கள் இல்லை
தலத்தின் சிறப்பு 1200 ஆண்டுகள் பழமையானது. திவ்ய தேசம். திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்த திருப்பதிகளுள் இதுவும் ஒன்று.
சுருக்கம்
திருநாங்கூருக்கு வந்த 11 எம்பெருமான்களில் இவர் காஞ்சி வரதராஜப் பெருமாள் ஆவார். பெரிய திருவடி, சந்திரன், இவ்விருவருக்கு பெருமாள் இங்கே காட்சி கொடுத்ததாக ஐதீஹம். திருமங்கையாழ்வாரால் மட்டும் 10 பாக்களால் மங்களாசாசனம். காஞ்சி வரதராஜர் போலவே இப்பெருமாளும் வரந்தருவதில் சமர்த்தராகையால், தை அமாவாசை கருட சேவைக்கு இப்பெருமானும் எழுந்தருள்வார்.
திருமணிக்கூடம் மணிக்குடி நாயகன் கோயில்
கோயிலின் அமைப்பு
பாதுகாக்கும் நிறுவனம் இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் வழிபாட்டில் உள்ளது.
அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் சீர்காழி தோணியப்பர் கோயில், ஆக்கூர் சிவன் கோயில், தலைச்சங்காடு சிவன் கோயில்
செல்லும் வழி இத்தலம் திருநாங்கூரிலிருந்து கிழக்கே சுமார் 4 பர்லாங் தூரத்தில் உள்ளது.
கோவில் திறக்கும் நேரம் காலை 6.00 மணி முதல் 12.00 மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 வரை
திருமணிக்கூடம் மணிக்குடி நாயகன் கோயில்
அருகிலுள்ள பேருந்து நிலையம் திருமணிக்கூடம்
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம் திருநாங்கூர்
அருகிலுள்ள விமான நிலையம் திருச்சி
தங்கும் வசதி சீர்காழி வட்டார விடுதிகள்
ஒளிப்படம் எடுத்தவர் தமிழ் இணையக் கல்விக்கழகம்
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் தமிழ் இணையக் கல்விக்கழகம்
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 28 Nov 2018
பார்வைகள் 40
பிடித்தவை 0

தொடர்புடைய வழிபாட்டுத் தலம்