தருமத்துப்பட்டி செப்பேடு
| செப்பேட்டின் பெயர் | தருமத்துப்பட்டி செப்பேடு |
|---|---|
| செப்பேடு கிடைக்கப் பெற்ற இடம் | தருமத்துப்பட்டி |
| ஊர் | தருமத்துப்பட்டி |
| வட்டம் | திருமங்கலம் |
| மாவட்டம் | மதுரை |
| மொழியும்எழுத்தும் | தமிழ்-தமிழ் |
| அரசு/ஆட்சியாளர் | நாயக்கர் / திருமலை நாயக்கர் |
| வரலாற்று ஆண்டு | 19.3.1655 |
| அளவுகள் / பரிமாணங்கள் | 21 செ.மீ. உயரம் 14 செ.மீ. அகலம் |
|
விளக்கம்
திருமலை நாயக்கரிடம் “பெத்தபிள்ளை“ என்றும் “திருமலை“ என்றும் பட்டம் பெற்ற பெத்தபிள்ளை திருமலைப்புன்னைத் தேவன் என்பவனுக்குக் கம்பிளி அதிகாரம், பாதகுறடு, காளாஞ்சி முதலிய சிறப்புகள் செய்து அவனுக்குக் கம்பிளி போடுகிறபோது பாதகாணிக்கையாக 5 பணம், அரண்மனையிலிருந்து பணமுடிப்பு 60 பணம் ஆகியவை கிடைப்பதற்கும், அவனுக்குப் பெண் குழந்தை பிறந்த போது “திருமலைபுன்னியக்கா“ என்று பெயர் வைத்துத் தங்கப்பதக்கம் வழங்குவதற்கும் மேலும் உச்சப்பட்டி, தருமத்துப்பட்டி ஆகிய இரண்டு கிராமங்கள் அவனுக்கு விட்டுக் கொடுத்ததற்கும் பதினெட்டுப் பட்டிக் கோனார்கள் அவனுக்குச் செய்ய வேண்டிய சிறப்புகளுக்கும் ஆதாரமாக அளிக்கப்பட்ட செப்புப் பட்டயம் இது. இதில் சிவகங்கை மன்னர், புதுக்கோட்டை மன்னர் இருவரும் குறிப்பிடப்படுகின்றனர். மதுரையில் இன்றுள்ள யாதவர்களுக்கான கிருஷ்ணமடத்தில் இன்னும் திருமலைத் தேவன் வழியினருக்கு மரியாதைகள் இருப்பதாகத் தெரிகிறது. |
|
|
குறிச்சொல்
|
|
|
குறிப்புதவிகள்
திருமலை நாயக்கர் செப்பேடுகள்,தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னை. 1
|
|
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
-
IMAGE
7 Files
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 06 Sep 2017 |
| பார்வைகள் | 250 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 0 |