Back
வழிபாட்டுத் தலம்
மாங்காடு வைகுண்டப் பெருமாள் கோயில்
வழிபாட்டுத் தலத்தின் பெயர் மாங்காடு வைகுண்டப் பெருமாள் கோயில்
வேறு பெயர்கள் வைகுண்டப் பெருமாள், சீர் பெருமாள்
ஊர் மாங்காடு
வட்டம் காஞ்சிபுரம்
மாவட்டம் காஞ்சிபுரம்
தொலைபேசி 044-26272053, 26495883
உட்பிரிவு 2
மூலவர் பெயர் வைகுண்டப் பெருமாள்
வழிபாடு காலசந்தி, உச்சிக்காலம், சாயரட்சை, அர்த்தஜாமம்
திருவிழாக்கள் வைகுண்ட ஏகாதசி
காலம் / ஆட்சியாளர் கி.பி.14-15-ஆம் நூற்றாண்டு / விசயநகரர்
கல்வெட்டு / செப்பேடு இல்லை
சுவரோவியங்கள் இல்லை
சிற்பங்கள் கருவறையில் பெருமாள் அமர்ந்த கோலத்தில் காட்சியளிக்கிறார். நான்கு திருக்கைகளில் பின் வலதில் பிரயோகச் சக்கரமும், பின் இடதில் சங்கும் ஏந்தியுள்ளார். வலது முன்கை கணையாழியை வைத்துள்ளது. திருமாலின் வடிவம் பல்லவர்-சோழர் கால இடைக்காலத்தில் அமைக்கப்பட்டதாக அதன் உருவமைப்பை நோக்குகையில் தெரிகிறது. மேலும் வாயிலில் மூன்று கால் உடைய முனிவர் ஒருவர் அமர்ந்துள்ளார். கோட்டங்கள் வெற்றுக் கோட்டங்களாகவே உள்ளன. தளங்களில் சுதைச் சிற்பங்கள் காணப்படுகின்றன. மிகப்பெரிய கோயில் வளாகம் அமைந்துள்ளது. கோயிலைச் சுற்றிலும் சிறு கோயில்கள் அமைந்துள்ளன. முகமண்டபத்தில் ஆழ்வார் சிற்பங்கள் அமர்ந்த நிலையில் காணப்படுகின்றன. இக்கோயிலில் பெருமாளுக்குரிய எட்டுதிக்கு காவலர்கள் சிற்பம் இருந்திருக்க வேண்டும். ஆனால் தற்போது ஒரே ஒரு சிற்பம் மட்டுமே உள்ளது. அது வருணனாய் இருக்கலாம். சிம்மத் தூண் ஒன்று இக்கோயிலில் உடைந்த நிலையில் கிடைக்கிறது. எனவே இக்கோயில் பல்லவர் காலத்திலோ, சோழர்கள் காலத்திலோ கற்றளியாய் இருந்திருக்க வேண்டும்.
தலத்தின் சிறப்பு 600 ஆண்டுகள் பழமையானது. விசயநகரர் கட்டடக் கலையைப் பிரதிபலிக்கிறது.
சுருக்கம்
பண்டையக் காலத்தில் இத்தலம் முழுவதும் மாமரக்காடாகக் காட்சியளித்ததால் மாங்காடு என்று பெயர் பெற்றது. சூதவனம் என்று இத்தலத்திற்கு மற்றொரு பெயர் உண்டு. மாங்காடு காமாட்சியம்மன் கோயிலின் அருகே வைகுண்டப் பெருமாள் கோயில் உள்ளது. உள்ளது. சீர் கொண்டு வந்த பெருமாளாக தன் வலது உள்ளங்கையில் கணையாழி (மோதிரம்) ஒன்றை வைத்துள்ளார். மார்க்கண்டேய மகரிஷியின் திருவுருவமும் இக்கோயிலில் உள்ளது. அவரே பெருமாளை இத்தலத்தில் தங்குமாறு வேண்டினார். இக்கோயிலில் கல்வெட்டுகள் ஏதும் இல்லை. மாங்காடு காமாட்சி அம்மனின் உபகோயிலாக இக்கோயில் திகழ்கிறது. சைவம், வைணவம், சாக்தம், சமணம் ஆகிய மதங்கள் செழித்திருந்த பகுதியாக பண்டு இருந்திருப்பதை அறியமுடிகிறது.
மாங்காடு வைகுண்டப் பெருமாள் கோயில்
கோயிலின் அமைப்பு இக்கோயில் விஜயநகரக் கட்டடப்பாணியின் இறுதி வடிவில் கட்டப்பட்டு, கருவறையும், அர்த்தமண்டபமும் அதனுடன் ஒருமித்த மகாமண்டபமும் கூடியது. மாங்காடு காமாட்சி அம்மன் திருக்கோயிலின் உபகோயிலாக இக்கோயில் திகழ்கிறது. கருவறையில் பெருமாள் அமர்ந்த கோலத்தில் காட்சியளிக்கிறார். நான்கு திருக்கைகளில் பின் வலதில் பிரயோகச் சக்கரமும், பின் இடதில் சங்கும் ஏந்தியுள்ளார். வலது முன்கை கணையாழியை வைத்துள்ளது. திருமாலின் வடிவம் பல்லவர்-சோழர் கால இடைக்காலத்தில் அமைக்கப்பட்டதாக அதன் உருவமைப்பை நோக்குகையில் தெரிகிறது. மேலும் வாயிலில் மூன்று கால் உடைய முனிவர் ஒருவர் அமர்ந்துள்ளார். கருவறை விமானம் மூன்று தளங்களை உடையதாக விளங்குகிறது. இக்கோயில் முழுவதும் புனரமைக்கப்பட்டுள்ளது. தாங்குதளம் முதல் கலசம் வரை முழுவதும் செங்கல் தளியாகவே தற்போது உள்ளது. விமானத்தின் சுவர்ப்பகுதிகளில் தூண்களுடன் கூடிய கோட்டங்கள் உள்ளன. கோட்டங்கள் வெற்றுக் கோட்டங்களாகவே உள்ளன. தளங்களில் சுதைச் சிற்பங்கள் காணப்படுகின்றன. மிகப்பெரிய கோயில் வளாகம் அமைந்துள்ளது. கோயிலைச் சுற்றிலும் சிறு கோயில்கள் அமைந்துள்ளன.
பாதுகாக்கும் நிறுவனம் இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் வழிபாட்டில் உள்ளது.
அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் வெள்ளீசுவரர் கோயில், மாங்காடு காமாட்சியம்மன் கோயில், வேம்புலியம்மன் கோயில்
செல்லும் வழி சென்னை கோயம்பேட்டிலிருந்து 15 கி.மீ. தொலைவில் மாங்காடு அமைந்துள்ளது.
கோவில் திறக்கும் நேரம் காலை6.00-12.30 முதல் மாலை 4.00-8.30 வரை
மாங்காடு வைகுண்டப் பெருமாள் கோயில்
அருகிலுள்ள பேருந்து நிலையம் குன்றத்தூர், குமணன் சாவடி, கோயம்பேடு
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம் தாம்பரம், சென்னை
அருகிலுள்ள விமான நிலையம் சென்னை - மீனம்பாக்கம்
தங்கும் வசதி சென்னை மாநகர விடுதிகள்
ஒளிப்படம் எடுத்தவர் மதுரை கோ.சசிகலா
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் மதுரை கோ.சசிகலா
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 06 May 2017
பார்வைகள் 31
பிடித்தவை 0

தொடர்புடைய வழிபாட்டுத் தலம்