வழிபாட்டுத் தலம்
ஸ்ரீகண்ணாத்தாள் கோயில்
| வழிபாட்டுத் தலத்தின் பெயர் | ஸ்ரீகண்ணாத்தாள் கோயில் |
|---|---|
| வேறு பெயர்கள் | கண்ணாத்தாள், கண்ணுடைய நாயகி |
| ஊர் | பொருப்புமேத்துபட்டி |
| வட்டம் | உசிலம்பட்டி |
| மாவட்டம் | மதுரை |
| உட்பிரிவு | 5 |
| தாயார் / அம்மன் பெயர் | ஸ்ரீகண்ணாத்தாள் |
| திருக்குளம் / ஆறு | வலங்காகுளம் ஊர் குளம் |
| வழிபாடு | இருகால பூசை |
| திருவிழாக்கள் | மாசி மகாசிவராத்திரி |
| காலம் / ஆட்சியாளர் | கி.பி.17-ஆம் நூற்றாண்டு/நாயக்கர் காலம் |
| கல்வெட்டு / செப்பேடு | இல்லை |
| சுவரோவியங்கள் | இல்லை |
| சிற்பங்கள் | ஸ்ரீகண்ணாத்தாள் கோயிலைப் பொறுத்தவரை முகப்பு நுழைவாயிலின் மேல் சுதைச் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கண்ணாத்தாள், சரசுவதி, இலக்குமி, கருப்பணசாமி, நந்தி உருவங்கள் காணப்படுகின்றன. கண்ணாத்தாள் கோயிலின் கருவறையில் கண்ணாத்தாள் திருவுருவமும், கருவறையின் நுழைவாயிலின் இருபுறமும் பிள்ளையார், முருகன் சிற்பங்களும் உள்ளன. கண்ணாத்தாள் திருவுருவம் அமர்ந்த நிலையில், கையில் ஆயுதங்களுடன் காணப்படுகின்றது. முப்பெரும் தேவியரில் சக்தியின் அம்சமாக கண்ணாத்தாள் அம்மன் இங்கு வழிபடப்பெறுகிறார். |
| தலத்தின் சிறப்பு | இக்கோயில் பல குடும்பத்தினருக்கு குலதெய்வமாக விளங்குகிறது. நாட்டார் மரபில் பெண்தெய்வ வழிபாடு சிறப்புடையது. |
|
சுருக்கம்
வலங்காகுளத்திலுள்ள ஸ்ரீகண்ணாத்தாள் அம்மன் கோயில் பல குடும்பத்தினருக்கு குலதெய்வக் கோயிலாக விளங்குகிறது. கண்ணாத்தாள் கோயில் கருவறையும், மண்டபமும் கொண்டதாக விளங்குகிறது. இக்கோயிலின் இடதுபுறத்தில் காவல்தெய்வம் கருப்பசாமிக்கு தனி கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் தற்போது புனரமைக்கப்பட்டு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
|
|
ஸ்ரீகண்ணாத்தாள் கோயில்
| கோயிலின் அமைப்பு | கண்ணாத்தாள் கோயில் முழுவதும் செங்கல் கட்டிடமாக விளங்குகிறது. கோபுரம் காணப்படவில்லை. நுழைவாயில் ஒன்று பெரிய அளவில் முகப்பில் அமைக்கப்பட்டுள்ளது. தற்காலத்தில் இக்கோயில் கட்டப்பட்டுள்ளது. வட்டவடிவ விமானத்தைப் பெற்று விளங்குகிறது. விமானத்தில் பெண் தெய்வங்களின் சுதைச் சிற்பங்கள் விளங்குகின்றன. கருவறை சதுர வடிவத்தில் அமைந்துள்ளது. கருவறையின் நடுவே கண்ணாத்தாளின் திருவுருவம் அமைக்கப்பட்டுள்ளது. கருவறை விமானத்தின் கிரீவப்பகுதியின் நாற்புறமும் நந்தி உருவம் காணப்படுகின்றது. நீளவாக்கில் ஒரு முன் மண்டபமும் கொண்டதாக விளங்கும் இக்கோயிலின் பரந்த முன்புற வெளியில் தீபத்தூண் ஒன்று கல்லினால் அமைக்கப்பட்டுள்ளது. கண்ணாத்தாள் கோயிலின் இடதுபுறம் இக்கோயிலின் காவல்தெய்வம் கருப்பசாமி கோயில் உள்ளது. |
|---|---|
| பாதுகாக்கும் நிறுவனம் | ஊர் நிர்வாகம் |
| அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் | கடசாரி அரிய குறும்பன் கோயில், பெத்தண்ணசாமி கோயில், அழகுமலையான் கோயில், அய்யப்பன் கோயில் |
| செல்லும் வழி | உசிலம்பட்டியிலிருந்து பொருப்புமேத்துப்பட்டி வழியாக வலங்காகுளத்தை அடையலாம். உள்ளூர் பேருந்துகள் செல்கின்றன. |
| கோவில் திறக்கும் நேரம் | காலை 7.00 மணி முதல் 9.00 மணி வரை, மாலை 5.00 மணி முதல் 7.00 மணி வரை |
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 12 Oct 2021 |
| பார்வைகள் | 77 |
| பிடித்தவை | 0 |