Back
வழிபாட்டுத் தலம்
ஸ்ரீவைகுண்டம் கள்ளப்பிரான் கோயில்
வழிபாட்டுத் தலத்தின் பெயர் ஸ்ரீவைகுண்டம் கள்ளப்பிரான் கோயில்
வேறு பெயர்கள் கள்ளப்பிரான் கோயில், ஸ்ரீவைகுண்டநாதன் கோயில்
ஊர் ஸ்ரீவைகுண்டம்
வட்டம் ஸ்ரீவைகுண்டம்
மாவட்டம் தூத்துக்குடி
உட்பிரிவு 2
மூலவர் பெயர் ஸ்ரீவைகுந்த நாதன், கள்ளப்பிரான்
தாயார் / அம்மன் பெயர் வைகுந்தவல்லி, பூதேவி
திருக்குளம் / ஆறு பிருகு தீர்த்தம், தாமிரபரணி தீர்த்தம், கலச தீர்த்தம்
வழிபாடு ஆறுகால பூசை
காலம் / ஆட்சியாளர் கி.பி.8-16-ஆம் நூற்றாண்டு/ பாண்டிய, சோழப் பேரரசுகள் மற்றும் விசயநகர நாயக்கர்
கல்வெட்டு / செப்பேடு இந்த இறைவனைத் “திருவழுதி வள நாட்டு ஸ்ரீவைகுந்தத்து நாயனார் கள்ளப்பிரான்” என்று கல்வெட்டு கூறுகிறது.
சுவரோவியங்கள் இல்லை
தலத்தின் சிறப்பு 108- திவ்ய தேசங்களில் ஒன்று. நம்மாழ்வார் மங்களாசாசனம் செய்யப்பட்ட தலம்.
சுருக்கம்
பிரம்மா தமது கமண்டலத்தில் தாமிரபரணி நீரையெடுத்து திருமாலுக்குத் திருமஞ்சனம் செய்து, நதிக்கரையிலேயே கலசத்தை ஸ்தாபிதம் செய்ததால் இன்றும் கலச தீர்த்தம் என்றே வழங்கப்படுகிறது. பிரம்மனாலேயே இங்கு வைகுண்டநாதனுக்கு சித்திரை உற்சவம் நடத்தப்பட்டது. மற்றெல்லா ஸ்தலங்களிலும் ஆதிசேடனில் தான் பெருமாள் பள்ளிகொண்டிருப்பார். ஆனால் இங்கு நின்ற திருக்கோலத்தில் உள்ள பெருமானுக்கு ஆதிசேடன் குடைபிடிக்கும் வண்ணத்தில் அமைந்துள்ளது காட்சி வேறெங்கும் காண்டற்கரியதாகும். நம்மாழ்வாரால் மட்டும் மங்களாசாசனம் செய்யப்பட்ட திருத்தலம். 108 வைணவ திவ்ய தேசங்களில் விண்ணுலகில் இருப்பதாகக் கருதப்படும் ஸ்ரீவைகுண்டம் என்னும் திருப்பெயரை மண்ணுலகில் தாங்கி நிற்கும் ஒரே திருத்தலம் இதுதான். மணவாள மாமுனிகளும் இங்கு எழுந்தருளினார். சோரநாதன் என்று பெயர்கொண்ட இப்பெருமானின் மீது வடமொழியில் இயற்றப்பட்டுள்ள “ஸ்ரீசோரநாத சுப்ரபாதம்” மிகவும் பிரசித்திபெற்றதாகும். காலதூஷகனுக்கு அருள் பாலித்து ஸ்ரீவைகுண்ட நாதனாக எழுந்தருளியிருந்த பெருமானும், அச்சிறு சன்னதியும் வெகு காலத்திற்குப்பின் பூமியில் புதையுண்டு போன. ஒரு சமயம் பாண்டிய மன்னர்கள் நெல்லையில் தமது அரசாட்சியை செலுத்துங்கால் மணப்படை, கொற்கை போன்றன, பாண்டியர்களின் முக்கிய பிரதேசமாக விளங்கின. அவ்வமயம் பாண்டியனின் பசுக்களை மேய்ப்பவன் சந்நிதி மூடிய இவ்விடத்திற்குப் பசுக்களை ஓட்டி வந்ததும் ஒரு பசுமட்டும் தனித்துச் சென்று வைகுண்ட பெருமாள் பூமியில் மறைந்துள்ள இடத்தில் பால் சொரிவதை வழக்கமாகக் கொண்டிருந்தது. இதைக்கண்ட பசுமேய்ப்பவன் இதனை மன்னனுக்குத் தெரிவிக்க மன்னன் தன் பரிவாரங்களுடன் சூழ இவ்விடம் வந்து தோண்டிப் பார்க்கையில், அங்கே வைகுண்டப் பெருமான் சன்னதியிருப்பதைக்கண்டு மிகவும் ஆனந்தித்து தற்போதுள்ள கோவிலை அமைத்தான் என்பர். இங்குள்ள கள்ளப்பிரானின் திருமேனியை உருவாக்கிய சிற்பி அப்பேரழகில் பெரிதும் மயங்கி தன் உள்ளத்தைப் பறிகொடுத்து ஆசைமிக்குப் போனதால் செல்லமாகக் கன்னத்தில் கிள்ளி விட்டார். ஆத்மார்த்தமான பக்தியில் கிள்ளிய வடுவை எம்பெருமான் கன்னத்தில் ஏற்றுக் கொண்டார். இன்றும் இப்பெருமானின் கன்னத்தில் கிள்ளப்பட்ட வடுவைக்காணலாம். இந்த இறைவனைத் “திருவழுதி வள நாட்டு ஸ்ரீவைகுந்தத்து நாயனார் கள்ளப்பிரான்” என்று கல்வெட்டு கூறுகிறது. இத்தலத்து எம்பெருமானை ஆண்டுக்கு இருமுறை சூரியதேவன் வந்து வழிபாடு செய்கிறான். அதாவது சித்திரை 6ம்தேதி, ஐப்பசி 6ந்தேதி. இவ்விரு தினங்களிலும் இளஞ்சூரியனை பொற்கிரணங்கள் கோபுர வாயில் வழியாக வைகுந்த நாதனின் திருமேனிக்கு அபிஷேகம் செய்கிறது. இத்தகைய அமைப்பில் இக்கோவிலின் கோபுர வாசல் அமைக்கப்பட்டது, எண்ணியெண்ணி வியக்கத் தக்கதாகும். சூரிய வழிபாடு 108 திருத்தலங்களில் இங்கு மட்டுமே உள்ளது. கி.பி. 1801இல் கட்டப்பொம்மனுக்கும், ஆங்கிலேயர்கட்கும் நடைபெற்ற போரில் இந்தக் கோவிலையும் சுற்றியுள்ள பகுதிகளையும் மையமாக வைத்து ஒரு கோட்டையாகப் பயன்படுத்தப்பட்டது.
ஸ்ரீவைகுண்டம் கள்ளப்பிரான் கோயில்
கோயிலின் அமைப்பு தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் திருக்கோவில், தென்நாட்டு வைஷ்ணவத் திருக்கோவில்களில் 7 நிலை ராஜகோபுரம் உள்ளத் திருக்கோவிலாகும். ராஜகோபுரத்தின் முன்பு பந்தல் மண்டபம் உள்ளது. கோபுரத்தை அடுத்து கொடிமர மண்டபமும், வாகன மண்டபமும், பலி பீடம், கொடிமரம், அதன் வலப்புறம் திருவேங்கடமுடையான் சன்னிதி, அனுமன் சன்னிதி, ராமர் சன்னிதி போன்றவை உள்ளன. அடுத்து நடு கோபுரம் உள்ளது. அந்த மூன்றாம் பிரகாரத்தில் லட்சுமி நரசிம்மர், ஸ்ரீ வைகுண்ட நாயகி, ஸ்ரீ சோர நாயகி, சொர்க்க வாசல், மணவாள மாமுனி சன்னிதி, தசாவதார சன்னிதி ஆகியவை உள்ளன.
பாதுகாக்கும் நிறுவனம் இந்துசமய அறநிலையத்துறை
அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் அருள்மிகு கைலாசநாதர் கோயில், ஆதிச்சநல்லூர்
செல்லும் வழி திருநெல்வேலியிலிருந்து, திருச்செந்தூர் செல்லும் சாலையில் உள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள “நவதிருப்பதிகளை” இதனை முதல் இருப்பிடமாகக் கொண்டு சேவித்து திரும்பலாம்.
கோவில் திறக்கும் நேரம் காலை 6.00 -12.30 முதல் மாலை 5.00-8.30 வரை
ஸ்ரீவைகுண்டம் கள்ளப்பிரான் கோயில்
அருகிலுள்ள பேருந்து நிலையம் ஸ்ரீவைகுண்டம்
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம் திருநெல்வேலி
அருகிலுள்ள விமான நிலையம் மதுரை
தங்கும் வசதி ஸ்ரீவைகுண்டம் விடுதிகள்
ஒளிப்படம் எடுத்தவர் தமிழ் இணையக் கல்விக்கழகம்
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் தமிழ் இணையக் கல்விக்கழகம்
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 21 Sep 2017
பார்வைகள் 146
பிடித்தவை 0

தொடர்புடைய வழிபாட்டுத் தலம்