வழிபாட்டுத் தலம்
தென்கரை சோணைமுத்தையா கோயில்
| வழிபாட்டுத் தலத்தின் பெயர் | தென்கரை சோணைமுத்தையா கோயில் |
|---|---|
| வேறு பெயர்கள் | சோணை முத்தையா |
| ஊர் | தென்கரை |
| வட்டம் | உசிலம்பட்டி |
| மாவட்டம் | மதுரை |
| உட்பிரிவு | 5 |
| திருக்குளம் / ஆறு | தென்கரை கண்மாய் |
| வழிபாடு | ஒருகால பூசை |
| திருவிழாக்கள் | மாசி மகாசிவராத்திரி |
| காலம் / ஆட்சியாளர் | பாண்டியர் |
| கல்வெட்டு / செப்பேடு | இல்லை |
| சுவரோவியங்கள் | இல்லை |
| சிற்பங்கள் | சோணை முத்தையா கோயிலில் பெரும்பாலும் சுதையால் வடிக்கப்பட்ட சிற்பங்களே காணப்படுகின்றன. நின்றநிலையில் உள்ள சோனைமுத்தையா கையில் ஓங்கிய அரிவாளுடன் காணப்படுகிறார். அவரின் வலதுபுறம் துப்பாக்கி ஒன்று வைக்கப்பட்டுள்ளது. கருவறையில் அய்யனார் தம் துணைவியருடன் வீற்றிருக்கிறார். கருவறையின் வெளியே விநாயகர், முருகன், ஏழு கன்னிமார் ஆகிய சிற்பங்கள் உள்ளன. தனி சந்நிதியில் கருப்பசாமியும் அருகில் மற்றொரு பெண்தெய்வமும் கற்சிற்பங்களாய் உள்ளனர். |
| தலத்தின் சிறப்பு | ஊரின் காவல் தெய்வம். பல்குடிகளுக்கு குலதெய்வம். |
|
சுருக்கம்
சோணைமுத்தையா வழிபாடு பன்னெடுங்காலமாக தென்தமிழகத்தில் மிகவும் புகழ் பெற்றது. தென்கரை சோணைமுத்தையா உசிலம்பட்டிக்கு அருகில் உள்ள வழிபாட்டுத் தலமாகும். மலையடிவாரக் கோயிலாக இக்கோயில் விளங்குகிறது. கோயில் தற்காலத்தில் கட்டப்பட்டுள்ளது. இம்மலை திடியன் மலையாகும். திடியன் மலை பல்வேறு பண்பாட்டுத் தளங்களை உடையதாக விளங்குகின்ற மலையாகும். இங்கு சமணம், சைவம், வைணவம் சார்ந்த கோயில்களோடு நாட்டார் வழிபாட்டு மரபுக் கோயில்களும் உள்ளன. இப்பகுதி வாழ் மக்களின் குலதெய்வக் கோயில்கள் இம்மலையைச் சுற்றியே அமைந்துள்ளன. அத்தகைய கோயில்களுள் ஒன்றுதான் சோணை முத்தையா கோயில் ஆகும்.
|
|
தென்கரை சோணைமுத்தையா கோயில்
| கோயிலின் அமைப்பு | மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகிலுள்ள தென்கரை கண்மாய் கரையின் ஓரத்தில் அமைந்துள்ள சோனை முத்தையா கோயில் திடியன் மலையடிவாரத்தில் தற்காலிக கட்டிடஅமைப்பினைப் பெற்று விளங்குகிறது. அய்யனார், கருப்பசாமி, சோனைமுத்தையா ஆகிய தெய்வங்கள் தனித்தனி சந்நிதிகள் பெற்று விளங்குகின்றன. சிறிய நுழைவு கோபுரம் காணப்படுகின்றது. இரண்டு கருவறை விமானங்கள் உள்ளன. விமானங்களில் வண்ணந்தீட்டப்பட்ட பலவிதமான சுதைச் சிற்பங்கள் காணப்படுகின்றன. |
|---|---|
| பாதுகாக்கும் நிறுவனம் | ஊர் நிர்வாகம் |
| அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் | திடியன் கைலாசநாதர் கோயில், சித்தர் குகை, காமாட்சியம்மன் கோயில், அழகர் கோயில் |
| செல்லும் வழி | மதுரை நகரிலிருந்து மேலக்கால் வழியாக சோழவந்தான் செல்லும் சாலையில் சுமார் 45 கி.மீ. தொலைவில் தென்கரை அமைந்துள்ளது. |
| கோவில் திறக்கும் நேரம் | காலை 7.00 மணி முதல் 9.00 மணி வரை, மாலை 5.00 மணி முதல் 7.00 மணி வரை |
தென்கரை சோணைமுத்தையா கோயில்
| அருகிலுள்ள பேருந்து நிலையம் | தென்கரை |
|---|---|
| அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம் | திருமங்கலம் |
| அருகிலுள்ள விமான நிலையம் | மதுரை |
| தங்கும் வசதி | உசிலம்பட்டி வட்டார விடுதிகள் |
| ஒளிப்படம் எடுத்தவர் | அஜித்குமார், கே.எஸ்.பி.குமார், இராம்குமார், சபீதா கீர்த்தன் |
| ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் | தமிழ் இணையக் கல்விக்கழகம் |
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 12 Oct 2021 |
| பார்வைகள் | 47 |
| பிடித்தவை | 0 |