வழிபாட்டுத் தலம்
எலுமியன்கோட்டூர் தெய்வநாயகேசுவரர் கோயில்
| வழிபாட்டுத் தலத்தின் பெயர் | எலுமியன்கோட்டூர் தெய்வநாயகேசுவரர் கோயில் |
|---|---|
| வேறு பெயர்கள் | இலம்பையங்கோட்டூர், திருவிலம்பையங்கோட்டூர் |
| ஊர் | எலுமியன்கோட்டூர் |
| வட்டம் | ஸ்ரீபெரும்புதூர் |
| மாவட்டம் | காஞ்சிபுரம் |
| தொலைபேசி | 044 - 27692412, 94448 65714, 96000 43000 |
| உட்பிரிவு | 1 |
| தாயார் / அம்மன் பெயர் | தாயினும் நல்லாள், கோடேந்து முலையம்மை, கதிர் முலையம்மை, கனககுசாம்பிகை |
| தலமரம் | மரமல்லிகை |
| திருக்குளம் / ஆறு | சந்திர தீர்த்தம், நாகதீர்த்தம், ரம்பா தீர்த்தம், மல்லிகா புஷ்கரிணி, தாமரை தீர்த்தம், பூதகண தீர்த்தம் |
| ஆகமம் | காமீகம் |
| வழிபாடு | ஆறுகால பூசை |
| திருவிழாக்கள் | குரு பெயர்ச்சி, மகா சிவராத்திரி, ஆருத்ரா தரிசனம், திருக்கார்த்திகை, ஆடிப்பெருக்கு |
| காலம் / ஆட்சியாளர் | கி.பி.7-12-ஆம் நூற்றாண்டு / பல்லவர்கள், சோழர்கள் |
| சுவரோவியங்கள் | இல்லை |
| சிற்பங்கள் | கருவறைத் திருச்சுற்றின் தென்புற தேவகோட்டத்தில் தட்சிணாமூர்த்தி, கருவறை மேற்குச் சுவரின் தேவகோட்டத்தில் மகாவிஷ்ணு, வடக்கில் நான்முகன் மற்றும் தென்புற அர்த்தமண்டப கோட்டத்தில் கணபதி, வடபுற அர்த்தமண்டப கோட்டத்தில் துர்க்கை ஆகியோர் உள்ளனர். இத்தல இறைவன் ஒரு சுயம்பு லிங்கமாகும், மூலவர் தீண்டாத் திருமேனி. பெரிய ஆவுடையார் அடிப்பாகம் பத்மம் போன்ற அமைப்பில் காணப்படுகிறது. தேவகன்னிகை அரம்பை வழிபட்ட அரம்பேஸ்வரர் இலிங்க வடிவில் 16 பட்டைகளுடன் மேற்கு நோக்கி காட்சி தருகிறார். |
| தலத்தின் சிறப்பு | 1300 ஆண்டுகள் பழமையானது. பாடல் பெற்ற தலம். திருஞானசம்பந்தர் பாடியுள்ளார். |
|
சுருக்கம்
சென்னை பெங்களூர் நெடுஞ்சாலையில் பூந்தமல்லியிலிருந்து ஒன்பது கி.மீ தொலைவிலுள்ள மேவளூர் குப்பம் எனும் ஊரிலிருந்து வலப்பக்கம் சென்று பேரம்பாக்கம் அடைந்து அங்கிருந்து ஐந்து கி.மீ தொலைவில் நரசிங்கபுரம் திருக்கோயில் செல்லும் வழியில் இலம்பையங்கோட்டூர் திருத்தலம் அமைந்துள்ளது. தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 246 வது தேவாரத்தலம் ஆகும். தொண்டை மண்டலத்தலங்களில் இது 13-வது தலமாகும். அப்பரும் சம்பந்தரும் இத்தலத்தைப் பாடியுள்ளனர். மூலவர் தீண்டாத் திருமேனியாக இலிங்க வடிவில் உள்ளார். பெரிய ஆவுடையார் அடிப்பாகம் பத்மம் போன்ற அமைப்பில் உள்ளது. மனஇறுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இங்குள்ள யோக தெட்சிணாமூர்த்தியை வணங்கினால் அதிலிருந்து விடுபடலாம் என்பது தொன் நம்பிக்கை. மூர்த்தி, தலம், தீர்த்தம் என சிறப்பு பெற்ற இங்கு அம்மன் தெற்கு நோக்கியபடி, ஸ்ரீசக்கரபீடத்துடன் அருளுகிறாள்.
|
|
எலுமியன்கோட்டூர் தெய்வநாயகேசுவரர் கோயில்
| கோயிலின் அமைப்பு | கிழக்கில் ஒரு முகப்பு நுழைவாயிலாக காணப்படுகின்றது. வாயிலைக் கடந்து உள்ளே சென்றால் பலிபீடமும், அதிகார நந்தி மண்டபமும் அமைந்துள்ளன. இக்கோயிலில் கொடிமரம் இல்லை. வெளித்திருச்சுற்றில் இடதுபுறம் தேவகன்னிகை அரம்பை வழிபட்ட அரம்பேஸ்வரர் இலிங்க வடிவில் 16 பட்டைகளுடன் மேற்கு நோக்கி காட்சி தருகிறார். கனககுசாம்பிகையின் திருமுன் தெற்கு நோக்கியபடி தனிச் சந்நிதியாக உள்ளது. இவ்வாலயத்திற்கு வெளியே இருபுறமும் திருக்குளங்களாக மல்லிகை தீர்த்தமும், சந்திர தீர்த்தமும் அமைந்துள்ளன. |
|---|---|
| பாதுகாக்கும் நிறுவனம் | இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் வழிபாட்டில் உள்ளது. |
| அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் | நரசிம்மபுரம் விஷ்ணு கோயில், திருவிற்கோலம் சிவன் கோயில், பேரம்பாக்கம் கோயில் |
| செல்லும் வழி | திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கூவம் (திருவிற்கோலம்) சிவன் கோயிலின் தென்மேற்கே 4 கி மீ. தொலைவில் இந்த திருத்தலம் அமைந்துள்ளது. சென்னை - அரக்கோணம் மின்சார ரயில் மார்க்கத்திலுள்ள கடம்பத்தூரில் இறங்கி அங்கிருந்து பேரம்பாக்கம் சென்று பின் தனியார் வாகனங்கள் மூலம் இலம்பையங்கோட்டூர் செல்லலாம். |
| கோவில் திறக்கும் நேரம் | காலை 8 மணி முதல் 12 மணி வரை, மாலை 4-30 மணி முதல் இரவு 8 மணி வரை |
எலுமியன்கோட்டூர் தெய்வநாயகேசுவரர் கோயில்
| அருகிலுள்ள பேருந்து நிலையம் | எலுமியன்கோட்டூர் |
|---|---|
| அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம் | பேரம்பாக்கம், ஸ்ரீபெரும்புதூர் |
| அருகிலுள்ள விமான நிலையம் | மீனம்பாக்கம் |
| தங்கும் வசதி | ஸ்ரீபெரும்புதூர் வட்டார விடுதிகள் |
| ஒளிப்படம் எடுத்தவர் | திரு.வேலுதரன் |
| ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் | தமிழ் இணையக் கல்விக்கழகம் |
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 27 Feb 2021 |
| பார்வைகள் | 29 |
| பிடித்தவை | 0 |