வழிபாட்டுத் தலம்
உலகாபுரம் விஷ்ணு கோயில்
| வழிபாட்டுத் தலத்தின் பெயர் | உலகாபுரம் விஷ்ணு கோயில் |
|---|---|
| வேறு பெயர்கள் | அரிஞ்சய விண்ணகரம் |
| ஊர் | உலகாபுரம் |
| வட்டம் | வானூர் |
| மாவட்டம் | விழுப்புரம் |
| உட்பிரிவு | 2 |
| மூலவர் பெயர் | அரிஞ்சய விண்ணகர் வீற்றிருந்த ஆழ்வார் |
| காலம் / ஆட்சியாளர் | கி.பி.10-ஆம் நூற்றாண்டு / முதலாம் இராஜராஜ சோழன் |
| கல்வெட்டு / செப்பேடு | இக்கோயிலில் உள்ள முதலாம் இராஜேந்திர சோழனின் கல்வெட்டு ஒன்று இறைவனின் பெயரை அரிஞ்சய விண்ணகர் வீற்றிருந்த ஆழ்வார் என்று கூறுகிறது. மேலும் காலகண்ட பேரேரி, கண்டராதித்த பேரேரி போன்ற ஏரிகளின் பெயர்கள் கல்வெட்டுகளில் காணப்படுகின்றன. மேலும் இவ்வூரில் தெற்கில் வாசல் மகாசாத்தானார் அய்யனார் கோயில் கோகர்ணீசுவரம் உடைய மகாதேவர் கோயில் போன்ற கோயில்கள் இருந்ததாகவும் கல்வெட்டுகளின் வாயிலாக அறியமுடிகிறது. |
| சுவரோவியங்கள் | இல்லை |
| சிற்பங்கள் | கருவறை தேவகோட்டங்களில் ப்ரத்யும்னன், அனிருத்தன், வாசுதேவன் போன்ற சிற்பங்கள் காணப்படுகின்றன. |
| தலத்தின் சிறப்பு | 1000 ஆண்டுகள் பழமையானது. முதலாம் இராஜராஜ சோழன் கால கலை, கட்டடக்கலையைப் பிரதிபலிக்கின்றது. |
|
சுருக்கம்
சென்னையிலிருந்து 120 கி.மீ. தொலைவில் உள்ள திண்டிவனத்தில் இருந்து உப்புவேலூர் செல்லும் சாலையில் 18 கி.மீ. தொலைவில் வானூர் வட்டத்தில் உலகாபுரம் அமைந்துள்ளது. ட்டுகள் தெரிவிக்கின்றன. அமைக்கப்பட்டுள்ளனர். சோழர்கால உருளைத்தூண்கள் முகமண்டபத்தில் இடம் பெற்றுள்ளன.இக்கோயில் முழுவதும் புனரமைக்கப்பட்டுள்ளது. கருவறை தேவகோட்டங்களில் பிற்கால சிற்பங்கள் இடம்பெற்றுள்ளன. கருவறை சதுர வடிவில் அமைந்துள்ளது.
|
|
உலகாபுரம் விஷ்ணு கோயில்
| கோயிலின் அமைப்பு | இக்கோயில் முழுவதும் புனரமைக்கப்பட்டுள்ளது. கருவறை தேவகோட்டங்களில் பிற்கால சிற்பங்கள் இடம்பெற்றுள்ளன. கருவறை சதுர வடிவில் அமைந்துள்ளது. விமானம் தளப்பகுதி தற்போது காணப்படவில்லை. கருவறையில் விஜயநகர காலத்திய விஷ்ணு வடிவம் அமைந்துள்ளது. இக்கோயில் சோழர்களுக்குப் பின் விஜயநகர கலைப்பாணியையும் கொண்டு அமைந்துள்ளது. |
|---|---|
| பாதுகாக்கும் நிறுவனம் | தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் கீழ் மரபுச் சின்னமாக உள்ளது. வழிபாட்டில் உள்ளது. |
| அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் | பெருமுக்கல் சீதாகுகை, உலகாபுரம் சிவன் கோயில், கண்டராதித்தப் பேரேரி, காலகண்ட பேரேரி, ஷகாளி கோயில், அய்யனார் கோயில் |
| செல்லும் வழி | சென்னையிலிருந்து 120 கி.மீ. தொலைவில் உள்ள திண்டிவனத்தில் இருந்து உப்புவேலூர் செல்லும் சாலையில் 18 கி.மீ. தொலைவில் வானூர் வட்டத்தில் உலகாபுரம் அமைந்துள்ளது. |
| கோவில் திறக்கும் நேரம் | காலை 8.00 முதல் மாலை 5.00 வரை |
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 06 May 2017 |
| பார்வைகள் | 51 |
| பிடித்தவை | 0 |