வழிபாட்டுத் தலம்
பாலாறு கொண்ட அய்யனார் கோயில்
| வழிபாட்டுத் தலத்தின் பெயர் | பாலாறு கொண்ட அய்யனார் கோயில் |
|---|---|
| வேறு பெயர்கள் | அய்யன் கோயில் |
| ஊர் | நாட்டார்மங்கலம் |
| வட்டம் | மதுரை வடக்கு |
| மாவட்டம் | மதுரை |
| உட்பிரிவு | 5 |
| திருக்குளம் / ஆறு | பாலாறு |
| வழிபாடு | ஒருகால பூசை |
| திருவிழாக்கள் | மாசி மகாசிவராத்திரி |
| காலம் / ஆட்சியாளர் | பாண்டியர் |
| கல்வெட்டு / செப்பேடு | இல்லை |
| சுவரோவியங்கள் | இல்லை |
| சிற்பங்கள் | பாலாறு கொண்ட அய்யனார் கோயிலின் முன்பாக இருபுறமும் இரு வெண்புரவிகள் பாய்ந்த நிலையில் காட்டப்பட்டுள்ளன. அவற்றின் முன்னங்கால்கள் பூதகணத்தின் மேல் வைக்கப்ட்டுள்ளன. சிறிய கோயிலாக கருவறை அமைந்துள்ளது. கருவறையில் அய்யனார் தனித்து வீற்றிருக்கின்றனார். கொடிமரம் உள்ளது. பிற சிற்பங்கள் ஏதும் இடம்பெறவில்லை. |
| தலத்தின் சிறப்பு | பாலாற்றினை காக்கும் தெய்வமாக அவ்வாற்றின் கரையில் அமர்ந்துள்ள அய்யனார் வழிபாடு தொன்மையானது. |
|
சுருக்கம்
மதுரை மாவட்டத்திலுள்ள பாலாறு கொண்ட அய்யனார் கோயில் பாலாற்றங்கரையில் அமைந்துள்ள கோயிலாகும். நீர்நிலையில் அமைக்கப்படும் கோயில் தொன்மை வாய்ந்த வழிபாட்டுத் தலமாய் தமிழகத்தில் கருதப்படுகின்றது. நீர்நிலைகளை அமைத்தல் என்பது ஓர் அறமாக பண்டு மன்னர்களுக்கு புலவர்களால் அறிவுறுத்தப்பட்டது. ஏனெனில் நீரின்றி அமையாது உலகு என்பதனை உணர்ந்தோர் நம் முன்னோர். அவ்வாறு நீர்நிலைகளின் கரைகளைக் காத்தல் என்பது வீரர்களுக்கு பெருங்கடனாக பண்டு அமைந்தது. அத்தகு ஒரு கோயில் தான் பாலாறு கொண்ட அய்யனார் கோயில் ஆகும். இக்கோயில் கட்டிட அமைப்பைப் பெறவில்லை. ஆற்றின் கரையில் எழுந்தருளியுள்ள குதிரையில் அமர்ந்துள்ள அய்யனாரே முதன்மைத் தெய்வமாவார். கருப்பசாமி இங்கு காவல் தெய்வமாகவும், அய்யனின் பரிவாரத் தெய்வமாகவும் போற்றப்படுகிறார்.
|
|
பாலாறு கொண்ட அய்யனார் கோயில்
| கோயிலின் அமைப்பு | பாலாறு கொண்ட அய்யனார் கோயில் பரந்த வளாகத்தில் சிறிய அளவில் கருவறை விமானத்தைப் பெற்று விளங்குகிறது. கோயில் சிறிய அளவில் கட்டிட அமைப்பினைப் பெற்றுள்ளது. கொடிமரம் உள்ளது. அதன் முன்னே பலிபீடம் அமைக்கப்பட்டுள்ளது. சிறிய மண்டபத்தினையடுத்து கருவறை காணப்படுகின்றது. மண்டபத்தின் மேற்கூரைப்பகுதியின் நாற்புறமும் நந்தியும் பூதகணத்தாரும் அமர்ந்த நிலையில் உள்ளனர். மண்டபக் கூரையின் நடுவே நுழைவாயிலின் மேற்புறத்தில் அய்யனின் சுதை வடிவம் அமைக்கப்பட்டுள்ளது. |
|---|---|
| பாதுகாக்கும் நிறுவனம் | ஊர் நிர்வாகம் |
| அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் | நொண்டிக் கருப்பர் கோயில், ஸ்ரீஞானவேல் முருகன் கோயில் |
| செல்லும் வழி | மதுரையிலிருந்து 8 கி.மீ தொலைவில் மதுரை வடக்கு வட்டாரத்தில் அமைந்துள்ளது. |
| கோவில் திறக்கும் நேரம் | காலை 7.00 மணி முதல் 9.00 மணி வரை, மாலை 5.00 மணி முதல் 7.00 மணி வரை |
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 12 Oct 2021 |
| பார்வைகள் | 56 |
| பிடித்தவை | 0 |