Back
வழிபாட்டுத் தலம்
திருநாங்கூர் திருஅரிமேய விண்ணகரம்
வழிபாட்டுத் தலத்தின் பெயர் திருநாங்கூர் திருஅரிமேய விண்ணகரம்
வேறு பெயர்கள் குடமாடுகூத்தர் கோயில்
ஊர் திருநாங்கூர்
வட்டம் சீர்காழி
மாவட்டம் நாகப்பட்டினம்
உட்பிரிவு 2
மூலவர் பெயர் குடமாடு கூத்தன்
தாயார் / அம்மன் பெயர் அம்ருத கடவல்லி
திருக்குளம் / ஆறு அம்ருத கடவல்லி
வழிபாடு நான்கு கால பூசை
திருவிழாக்கள் கருடசேவை
காலம் / ஆட்சியாளர் கி.பி.9-ஆம் நூற்றாண்டு / சோழர்கள்
சுவரோவியங்கள் இல்லை
சிற்பங்கள் கருவறையில் மூலவர் அமர்ந்த திருக்கோலம். உற்சவர் கோபாலன் நாற்புயங்களுடன் காட்சியளிக்கிறார்.
தலத்தின் சிறப்பு 1200ஆண்டுகள் பழமையானது. திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற திருப்பதி.
சுருக்கம்
இது நாங்கூரிலேயே அமைந்துள்ள திவ்ய தேசமாகும். சீர்காழியிலிருந்து கிழக்கே 5 மைல். அரிமேய விண்ணகரம்என்றால் அனைவருக்கும் தெரியாது. குடமாடு கூத்தர் கோவில் என்றால் யாவருங் கூறுவர். கோவர்த்தன மலையைக் குடையாக எடுத்தாடிய ஹரியே இங்கு வந்துள்ளான் என்பது ஐதீஹம்.
திருநாங்கூர் திருஅரிமேய விண்ணகரம்
கோயிலின் அமைப்பு
பாதுகாக்கும் நிறுவனம் இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் வழிபாட்டில் உள்ளது.
அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் பள்ளிகொண்ட ரங்கநாதர் கோயில், வன் புருஷோத்தமன் கோயில், வைகுண்டநாதர் கோயில், மதங்கீசுவரர் கோயில்
செல்லும் வழி இத்தலம் சீர்காழியிலிருந்து கிழக்கே 5 மைல் தொலைவில் அமைந்துள்ளது.
கோவில் திறக்கும் நேரம் காலை 6.00 மணி முதல் 12.00 மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 வரை
திருநாங்கூர் திருஅரிமேய விண்ணகரம்
அருகிலுள்ள பேருந்து நிலையம் திருநாங்கூர்
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம் சீர்காழி
அருகிலுள்ள விமான நிலையம் திருச்சி
தங்கும் வசதி சீர்காழி வட்டார விடுதிகள்
ஒளிப்படம் எடுத்தவர் தமிழ் இணையக் கல்விக்கழகம்
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் தமிழ் இணையக் கல்விக்கழகம்
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 23 Nov 2018
பார்வைகள் 41
பிடித்தவை 0

தொடர்புடைய வழிபாட்டுத் தலம்