வழிபாட்டுத் தலம்
கொல்லங்குளம் அய்யனார் கோயில்
| வழிபாட்டுத் தலத்தின் பெயர் | கொல்லங்குளம் அய்யனார் கோயில் |
|---|---|
| வேறு பெயர்கள் | அய்யனார் கோயில் |
| ஊர் | பொதும்பு |
| வட்டம் | மதுரை வடக்கு |
| மாவட்டம் | மதுரை |
| உட்பிரிவு | 5 |
| திருக்குளம் / ஆறு | பொதும்பு கண்மாய் |
| வழிபாடு | ஒருகால பூசை |
| திருவிழாக்கள் | மாசி மகாசிவராத்திரி |
| காலம் / ஆட்சியாளர் | பாண்டியர் |
| கல்வெட்டு / செப்பேடு | இல்லை |
| சுவரோவியங்கள் | இல்லை |
| சிற்பங்கள் | இக்கோயிலில் அய்யனார் கருவறையில் வீற்றிருக்கிறார். காவல் தெய்வமான பரிவார தேவதைகளாக கருப்பசாமிகள், ஏழு கன்னிமார், பேய்ச்சி, இராக்காயி, குதிரைகள், யானை வாகனம் ஆகிய சுதைச் சிற்பங்கள் இக்கோயிலில் திறந்த வெளியில் வழிபாட்டில் உள்ளன. |
| தலத்தின் சிறப்பு | பொதும்பு கண்மாய் கரையில் இக்கோயில் அமைந்துள்ளது. கொல்லங்குளம் ஊரின் அய்யனார் இவர் ஆவார். |
|
சுருக்கம்
பொதும்பு கண்மாய் கரையில் அமைந்த அய்யனார் கோயில் பழைய நாட்டார் மரபின்படி வழிபாட்டில் உள்ளது. கட்டுமான அமைப்பு ஏதுமின்றி திறந்த வெளியில் ஆலமரத்தினடியில் கடவுளர் உருவங்கள் சுதையால் வடிக்கப்பட்டு, வண்ணந்தீட்டப்பட்டு வழிபாட்டில் உள்ளன. திருவிழாவின் போது புரவி எடுத்தல் நேர்த்திக்கடனாக இங்கு செலுத்தப்படுகிறது.
|
|
கொல்லங்குளம் அய்யனார் கோயில்
| கோயிலின் அமைப்பு | குறிப்பிடத்தக்க கட்டிட அமைப்பு காணப்படவில்லை. திறந்தவெளியில் ஆலமரத்தினடியில் நாட்டார் வழக்கப்படி இறைத்திருவுருவங்கள் அமைக்கப்பட்டு வழிபாட்டில் உள்ளன. |
|---|---|
| பாதுகாக்கும் நிறுவனம் | தனியார் |
| அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் | அம்மச்சியம்மன் கோயில், பொதும்பு மசூதி |
| செல்லும் வழி | மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து பாலமேடு செல்லும் சாலையில் சுமார் 10 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. |
| கோவில் திறக்கும் நேரம் | காலை 7.00 மணி முதல் 9.00 மணி வரை, மாலை 5.00 மணி முதல் 7.00 மணி வரை |
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 12 Oct 2021 |
| பார்வைகள் | 30 |
| பிடித்தவை | 0 |