வழிபாட்டுத் தலம்
குப்பல் நத்தம் சமணக் கோயில்
| வழிபாட்டுத் தலத்தின் பெயர் | குப்பல் நத்தம் சமணக் கோயில் |
|---|---|
| வேறு பெயர்கள் | சமணக்குகை கோயில் |
| ஊர் | குப்பல்நத்தம் |
| வட்டம் | உசிலம்பட்டி |
| மாவட்டம் | மதுரை |
| உட்பிரிவு | 6 |
| மூலவர் பெயர் | சமணத் தீர்த்தங்கரர்கள் |
| தாயார் / அம்மன் பெயர் | பத்மாவதி, பிராம்மி, சுந்தரி |
| திருவிழாக்கள் | சித்ரா பௌர்ணமி தினம் |
| காலம் / ஆட்சியாளர் | கி.பி.9-10-ஆம் நூற்றாண்டு / அச்சணந்தி முனிவர் |
| கல்வெட்டு / செப்பேடு | தீர்த்தங்கரர் உருவங்களின் கீழ் ஒரு சிதைந்த வட்டெழுத்துக் கல்வெட்டு காணப்படுகின்றது. இங்குள்ள தீர்த்தங்கரர்களில் ஐந்து திருமேனிகளை ஐவர் செய்தளித்துள்ளனர். அவர்களுள் ஒருவர் பெண் அடியார் என்று கல்வெட்டு குறிப்பிடுகின்றது. |
| சுவரோவியங்கள் | இல்லை |
| சிற்பங்கள் | இக்குடைவரைக் கோயிலில் சமணத்தீர்த்தங்கரர்களின் புடைப்புச் சிற்பங்கள் வழிபாட்டில் உள்ளன. மகாவீரர், பார்சுவநாதர், பாகுபலி போன்ற தீர்த்தங்கரர்களின் உருவங்கள் காலத்தால் முந்திய சிற்பக் கலைப்பாணியில் அமைந்துள்ளன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. |
| தலத்தின் சிறப்பு | 1100 ஆண்டுகள் பழமையானது. சமணக் குடைவரைக் கோயில். |
|
சுருக்கம்
குப்பல் நத்தம் மலையில் அமைந்துள்ள சமணக் குடைவரைக் கோயில் தரையிலிருந்து 100 மீ. உயரத்தில் உள்ளது. தற்போது உள்ளுர் மக்களால் வைதீகக் கோயிலாகக் கருதப்பட்டு வணங்கப்பட்டு வருகின்றது. தீர்த்தங்கரர் உருவங்களின் மீது எண்ணெய் பூசி, மஞ்சள், குங்குமப் பொட்டிட்டு வைதீகக் கடவுளர்களாக எண்ணி வழிபடுகின்றனர். சித்ரா பௌர்ணமி தினத்தன்று ஊர்த்திருவிழா நடைபெறும் போது இக்கோயிலில் பொங்கல் வைத்து படையல் செய்கின்றனர். மேலும் ஊரில் மழை பெய்யாவிட்டால், இவ்வூர் ஆண்கள் மட்டும் இக்கோயிலுக்குச் சென்று, ஆடு வெட்டி பலி கொடுத்து பூசை செய்து கும்பிடுகிறார்கள்.
|
|
குப்பல் நத்தம் சமணக் கோயில்
| கோயிலின் அமைப்பு | குடைவரை போன்ற அமைப்பில் பெரும் பாறையின் கீழே கோயில் போன்று மலைப்பாறையில் புடைப்புச் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இக்குடைவரையில் மூன்று சிற்பத் தொகுதிகள் காட்டப்பட்டுள்ளன. முதல் தொகுதியில் அமர்ந்த நிலையில் உள்ள தீர்த்தங்கரர்களின் உருவங்கள் முக்குடையுடன் காட்டப்பட்டுள்ளன. அடுத்தத் தொகுதியில் நின்ற நிலையில் இரண்டு தீர்த்தங்கரர் உருவங்களும், அமர்ந்த நிலையில் உள்ள தீர்த்தங்கரர் உருவமும் அமைக்கப்பட்டுள்ளன. மூன்றாவது தொகுதியில் பாகுபலி சிற்பம் காட்டப்பட்டுள்ளது. |
|---|---|
| பாதுகாக்கும் நிறுவனம் | உள்ளூர் மக்களால் நிர்வகிக்கப்பட்டு வழிபாட்டில் உள்ளது. |
| அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் | ஆனையூர் ஐராவதேஸ்வரர் கோயில், சிந்துபட்டி பெருமாள் கோயில், எழுமலை, புத்தாம்பட்டி ஜைனக்கோயில் |
| செல்லும் வழி | உசிலம்பட்டியிலிருந்து சேடப்பட்டி செல்லும் சாலையில் சின்னக்கட்டளைப் பிரிவிலிருந்து சுமார்2 கி.மீ. கிழக்காக சென்றால் குப்பல்நத்தம் அமைந்துள்ளது. |
| கோவில் திறக்கும் நேரம் |
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 28 Jun 2017 |
| பார்வைகள் | 448 |
| பிடித்தவை | 0 |