Back
வழிபாட்டுத் தலம்
நிலாத்திங்கள் துண்டத்தான் கோவில்
வழிபாட்டுத் தலத்தின் பெயர் நிலாத்திங்கள் துண்டத்தான் கோவில்
வேறு பெயர்கள் திருநிலாத் திங்கள் துண்டம்
ஊர் பெரிய காஞ்சி
வட்டம் காஞ்சிபுரம்
மாவட்டம் காஞ்சிபுரம்
உட்பிரிவு 2
மூலவர் பெயர் நிலாத்திங்கள் துண்டத்தான், சந்திரசூடப் பெருமாள்
தாயார் / அம்மன் பெயர் நேரொருவர் இல்லா வல்லி, நிலாத்திங்கள் துண்டத்தாயார்
திருக்குளம் / ஆறு சந்திர புஷ்கரணி
வழிபாடு நான்கு கால பூசை
திருவிழாக்கள் வைகுண்ட ஏகாதசி, இராமநவமி
காலம் / ஆட்சியாளர் கி.பி.8-ஆம் நூற்றாண்டு / பல்லவர், சோழர், பாண்டியர், விசயநகர-நாயக்கர்
சுவரோவியங்கள் இல்லை
தலத்தின் சிறப்பு 1200 ஆண்டுகள் பழமையானது. திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற திருப்பதி.
சுருக்கம்
திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட இத்தலம் பெரிய காஞ்சிபுரத்தில் உள்ள ஏகாம்பரேசுவரர் கோவிலுக்குள் உள்ளது. நிலா வென்றாலும், திங்கள் என்றாலும் ஒன்றுதான். அவ்வாறிருந்தும் நிலாத்திங்கள் துண்டத்தான் என்ற பெயர் எவ்வாருண்டாயிற்று என்று தெரியவில்லை. திருமங்கையாழ்வார் சொற்றொடர் மங்களாசாசனமே வழங்கியுள்ளார். பெரிய மதிலாகச்சுற்றி வளைத்து இரண்டு சன்னதிகளையும் ஒரு பெரும் கோட்டைக்குள் வைத்தது மாதிரி அமைத்துவிட்டனர். இந்த மதிலும் திருமங்கையாழ்வாரின் காலத்திற்குப் பின்னால்தான் ஏற்பட்டிருக்க வேண்டும். ஏனென்றால் தில்லை கோவிந்தராஜன் சிதம்பரம் நடராஜன் கோயிலுக்குள் உள்ளான் என்று திருமங்கையாழ்வார் ஓரிடத்திலும் சொல்லவில்லை. இப்பெருமாள் பார்ப்பதற்கு பேரழகு பொருந்தியவர். குளிர்ந்த கிரணங்களை வீசிக்கொண்டே இருக்கிறார் என்பதை இவர் முன்நின்ற சிறிது நேரத்திலேயே உணரமுடிகிறது. அவ்வளவு ரம்யமான தேஜஸ் பொருந்திய தண் என்ற நிலவுமுகன். பெயருக்கேற்ற பொருத்தத்துடன் பேரழகு பொலிய நிற்கிறார். மாமரத்தை தழைக்கச் செய்த பிறகு பார்வதி மீண்டும் யாகத்தை துவக்க இதனால் மேலும் சினந்த சிவன் தனது தலையில் உள்ளகங்கையை ஏவினார் தமக்கையாயிற்றே என்றெண்ணி தன்யாகத்திற்கு ஊறுவிளைவிக்க வேண்டாமென்று வேகமாக வந்த கங்கையை வேண்டினாள். கங்கை அதைப்பொருட்படுத்தவில்லை. பார்வதி தனது பக்தி மேலீட்டால் மணலினால் லிங்கம் செய்து தவமிருந்தாள். கங்கையால் அந்த லிங்கத்தைக் கரைக்க முடியவில்லை. இதைக் கண்ட பார்வதி மிக்க சந்தோஷத்துடன் அந்த லிங்கத்தை ஆலிங்கனம் செய்து கொண்டாள். இவ்விருவருக்கும் நிலாத்திங்கள் துண்டத்தான் அருள்பாலித்தார். இவ்விதம் சிவனுக்கும் பார்வதிக்கும் ஒருசேர அருளிய ஸ்தலம் உண்டென்றால் அது இது ஒன்றுதான். புராணங்களில் நேர் ஒருவரில்லா வல்லி என்று குறிக்கப்பட்ட இந்தப் பிராட்டிக்கு நிலாத்திங்கள் துண்டத்தானின் திவ்ய தேசத்தில் தனிச் சன்னதி உள்ளதாக அறிய முடிகிறது. இங்கு தற்போது நாச்சியாரில்லை. புராணங்கூறும் புஷ்கரணியில்லை. திருமங்கையாழ்வாரால் மட்டும் தலைப்பிலிட்ட பாடலால் மங்களாசாசனம். நூற்றெட்டுத் திருப்பதியந்தாதியில், நிலாத்திங்கள் துண்டத்தானாக எழுந்தருளியுள்ள எம்பெருமானே, அர்ஜு னன் நின்னை பூசித்து நின் திருவடிகளில் சமர்ப்பித்த மலர்களை திருவடி பாக்கியத்தின் மேன்மை கருதி. பதினொன்று கூத்துக்களில் ஒன்றான பாண்டரங்கம் என்னும் கூத்தாடும் சிவன் தன் தலையில் ஏற்றுக் கொண்டான். இதை ஆழ்வார்கள் பலரும் அருளியுள்ளனர். இவ்விதம் கலாத்திங்கள் (கலை-நிலவு) கலாத்திங்கள் - வளரும் திங்கள் (கலை என்றாலே வளர்தல் என்ற ஒரு பொருளும் உண்டு) சூடிய இவனது தலைமேல் தனது பாத பூஜைப் புஷ்பங்கள் இருந்தும் இந்த மேதினயோர் நீயே பரம்பொருள்என்று நின் திருவடிப் பெருமையை தெளியாமல் உள்ளார்களே என்று பாடி இருப்பது இத்தல வரலாற்றோடு மிகவும் சிந்தித்துப் பார்க்கத் தக்கதாகும்.
நிலாத்திங்கள் துண்டத்தான் கோவில்
கோயிலின் அமைப்பு
பாதுகாக்கும் நிறுவனம் இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் வழிபாட்டில் உள்ளது.
அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் காஞ்சி காமாட்சியம்மன் கோயில், வரதராஜப்பெருமாள் கோயில், வைகுண்டப் பெருமாள் கோயில், ஏகாம்பரேஸ்வரர் கோயில்
செல்லும் வழி இத்தலம் பெரிய காஞ்சிபுரத்தில் உள்ள ஏகாம்பரேசுவரர் கோவிலுக்குள் உள்ளது.
கோவில் திறக்கும் நேரம் காலை 6.00 மணி முதல் 12.00 மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 வரை
நிலாத்திங்கள் துண்டத்தான் கோவில்
அருகிலுள்ள பேருந்து நிலையம் காஞ்சிபுரம்
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம் காஞ்சிபுரம்
அருகிலுள்ள விமான நிலையம் சென்னை - மீனம்பாக்கம்
தங்கும் வசதி காஞ்சிபுரம் நகர விடுதிகள்
ஒளிப்படம் எடுத்தவர் தமிழ் இணையக் கல்விக்கழகம்
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் தமிழ் இணையக் கல்விக்கழகம்
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 28 Nov 2018
பார்வைகள் 40
பிடித்தவை 0

தொடர்புடைய வழிபாட்டுத் தலம்