வழிபாட்டுத் தலம்
கூரம் சிவன்கோயில்
| வழிபாட்டுத் தலத்தின் பெயர் | கூரம் சிவன்கோயில் |
|---|---|
| வேறு பெயர்கள் | வித்யா வினீத பல்லவ பரமேஸ்வரர் |
| ஊர் | கூரம் |
| வட்டம் | காஞ்சிபுரம் |
| மாவட்டம் | காஞ்சிபுரம் |
| உட்பிரிவு | 1 |
| மூலவர் பெயர் | வித்யா வினீத பல்லவ பரமேஸ்வரர் |
| காலம் / ஆட்சியாளர் | கி.பி.7--ஆம் நூற்றாண்டு / பல்லவ மன்னன் முதலாம் பரமேஸ்வர வர்மன் |
| கல்வெட்டு / செப்பேடு | கூரம் செப்பேடு இவ்வூரில் கண்டெடுக்கப்பட்டது. இச்செப்பேடு இக்கோயிலைக் கட்டிய மன்னன் முதலாம் பரமேஸ்வர வர்மப் பல்லவனால் தானமாக வழங்கப்பட்டது. இக்கோயிலில் ஒன்பது கல்வெட்டுகள் உள்ளன. |
| சுவரோவியங்கள் | இல்லை |
| சிற்பங்கள் | சிற்பங்கள் ஏதும் இடம் பெறவில்லை. பரிவார சந்நிதிகள் இல்லை. |
| தலத்தின் சிறப்பு | 1300 ஆண்டுகள் பழமையானது. பல்லவர் கால கலை மற்றும் கட்டடக் கலையைப் பிரதிபலிக்கிறது. தொண்டைமண்டலத்தின் முதலாம் தூங்கானை மாட வடிவக் கோயிலாகும். காலத்தால் முந்தியது. |
|
சுருக்கம்
காஞ்சிபுரம் கூரம் சிவன்கோயில் முதலாம் பரமேசுவர வர்மனால் கி.பி.679-இல் எடுப்பிக்கப்பட்டது. இவ்வூரில் கண்டெடுக்கப்பட்ட பல்லவ மன்னன் முதலாம் பரமேசுவரவர்மனால் வெளியிடப்பட்ட மிகவும் புகழ் வாய்ந்த கூரம் செப்பேடு தற்போது சென்னை அரசு அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. இக்கோயில் தூங்கானை மாடவடிவில் கட்டப்பட்ட முதல் கோயிலாகும். காலத்தால் மிகவும் பழமையானது. பாம்பினை கரத்தில் பற்றிய ஊர்த்துவ ஜானு நடனமாடும் கூரம் நடராஜர் சிற்பம் புகழ் பெற்றது. இக்கோயிலில் காலத்தால் முந்திய ஒன்பது கல்வெட்டுகள் உள்ளன. அவற்றுள் இரண்டாம் நந்திவர்மன், நிருபதுங்க வர்மன் மற்றும் இராஜராஜசோழன் ஆகிய மன்னர்களின் கல்வெட்டுகள் குறிப்பிடத்தக்கவை.
|
|
கூரம் சிவன்கோயில்
| கோயிலின் அமைப்பு | கோயில் முழுவதும் புனரமைக்கப்பட்டுள்ளது. கருவறை விமானத்தில் தளங்கள் தற்போது இல்லை. தெற்கு நோக்கிய நுழைவு வாயிலைக் கொண்டுள்ளது. |
|---|---|
| பாதுகாக்கும் நிறுவனம் | தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் கீழ் மரபுச் சின்னமாக உள்ளது. வழிபாட்டில் உள்ளது. |
| அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் | சிவன்கூடல், இடையார்பாக்கம் சிவன்கோயில், சிவபுரம் |
| செல்லும் வழி | சென்னையிலிருந் 75 கி.மீ. தொலைவில் உள்ள் காஞ்சிபுரம் அருகில் ஈஞ்சம்பாக்கம் இரயில் நிலையத்திலிருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ளது. |
| கோவில் திறக்கும் நேரம் | காலை 8.00 முதல் மாலை 5.00 வரை |
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 06 May 2017 |
| பார்வைகள் | 50 |
| பிடித்தவை | 0 |