Back
வழிபாட்டுத் தலம்
சாரநாதப்பெருமாள் கோயில்
வழிபாட்டுத் தலத்தின் பெயர் சாரநாதப்பெருமாள் கோயில்
வேறு பெயர்கள் திருச்சாரம்
ஊர் திருச்சேறை
வட்டம் கும்பகோணம்
மாவட்டம் தஞ்சாவூர்
தொலைபேசி 0435-2468078, 2468001, 9444104374
உட்பிரிவு 2
மூலவர் பெயர் சாரநாதன்
தாயார் / அம்மன் பெயர் சார நாயகி அல்லது சார நாச்சியார், பஞ்சலெட்சுமி
திருக்குளம் / ஆறு சார புஷ்கரணி
வழிபாடு ஆறுகால பூசை
திருவிழாக்கள் தைப்பூசத் திருவிழா
காலம் / ஆட்சியாளர் கி.பி.8-9-ஆம் நூற்றாண்டு / சோழர்
கல்வெட்டு / செப்பேடு தஞ்சையை ஆண்ட அழகிய மணவாள நாயக்க மன்னராலும் அவரது மந்திரி நரச பூபாலராலும், இக்கோவிலின் பிரதானச் சுவர்களும், சற்றேறக்குறைய இன்றுள்ள அமைப்பில் கட்டப்பட்டது. இம்மன்னர் மன்னார்குடியில் உள்ள ராஜகோபாலன் சன்னதிக்கு திருப்பணிக்காக வண்டிவண்டியாகக் கல் அனுப்பிய போது, வண்டிக்கு ஒரு கல்லாக, திருச்சேறை கோவில் பரிபாலனத்திற்கு நரச பூபாலன் இறங்கி வைக்க இதைச் செவியுற்ற மன்னன் அது உண்மையாவென்று சோதிக்க அங்கு வந்தான். இதனையறிந்த நரச பூபாலன் இந்த இக்கட்டிலிருந்து தன்னைக் காக்குமாறு இராஜகோபாலனை மனதுள் தியானிக்க மன்னர் வந்து இங்கு இறங்கியதும் இந்த திருச்சேறைத் திருமால் அவருக்கு மன்னார்குடி ராஜகோபாலனாகவே காட்சியளிக்க அது கண்டு மிகவும் ஆச்சர்யமுற்ற மன்னன், நரசபூபாலனைப் பாராட்டியது மட்டுமன்றி தானும் உடனிருந்து எண்ணற்ற சேவைகள் செய்து பெருவாரியாக நிலங்களையும் தானமளித்தார் என்று கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன. மாவடிப்பள்ளம் “பாபாஷாகேப்” என்னும் இஸ்லாமியர் இப்பெருமானை வணங்கி புத்திரப்பேறு பெற்று இத்தலத்திற்கு பூமிதானம் செய்தாரென்றும் கல்வெட்டுக்களால் அறியமுடிகிறது.
சுவரோவியங்கள் இல்லை
சிற்பங்கள் கோயிலுக்கு எதிரில் உள்ள சார புஷ்கரிணியின் மேற்கு கரையில் அகத்தியர், பிரம்மா, காவரி ஆகியோருக்குத் தனி சன்னதி உள்ளன. கோயில் உள் சுற்றில் சீனிவாசப்பெருமாள், ஆழ்வார்கள், நம்மாழ்வார், உடையவர், கூரத்தாழ்வார், ராமர், அனுமான், ராஜகோபாலன், ஆண்டாள் மற்றும் சத்தியபாமா, ருக்மணி, நரசிம்ம மூர்த்தி பால சாரநாதர் ஆகியோர் சன்னதிகள் உள்ளன. இக்கோவிலின் மூலவர் சாரநாதன் நின்ற கோலத்தில் கிழக்குமுகமாக உள்ளார். இக்கோவிலில் மட்டுமே பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி, மகாலட்சுமி, சாரநாயகி, நீலாதேவி என்ற ஐந்து தேவியருடன் காணப்படுகிறார். மூலத்தானத்தில் பெருமாளுக்கு வலது பக்கம் மார்க்கண்டேயரும் இடதுபக்கம் காவிரித் தாயும் அமர்ந்துள்ளனர். குளக்கரையில் காவேரியம்மனுக்குத் தனிக்கோவில் உள்ளது. புஷ்கரணிக்கு வடமேற்கு திசையில் அனுமன் சன்னிதி அமைந்துள்ளது.
தலத்தின் சிறப்பு 1200 ஆண்டுகள் பழமையானது. திருமங்கையாழ்வார் மங்களாசாசனம்
சுருக்கம்
108 திவ்ய ஸ்தலங்களில் இத்திருத்தலம் தவிர பெருமாள் தனது 5 தேவிகளுடன் காட்சி தருவது வேறு எந்த ஸ்தலத்திலும் இல்லை. இங்குள்ள மூலவர் தனது வலது கையில் பத்மம் வைத்துள்ள காட்சி பரமபதம் எனப்படும் வைகுண்டத்தில் எம்பெருமான் தனது வலதுகரத்தில் பத்மம் வைத்துள்ளதற்கொப்பானதாகும். திருமால் காவேரிக்குப் பிரத்யட்சமானது தை மாதம் பூச நட்சத்திரத்தில் வியாழன் சஞ்சரித்த காலமாகும். எனவே 12 ஆண்டுகட்கு ஒரு முறை தை மாதம் பூசம் நட்சத்திரத்தில் வியாழன் கிரகம் வரும்போது இந்த ஸார புஷ்கரணியில் நீராடுவது குடந்தை என்னும் கும்பகோணத்தில் கொண்டாடப்படும் மகாமகத்திற்கு ஈடானதாகும். குடந்தையில் உள்ள சித்திரத்தேர் மற்றும் திருவாரூர்த் தேரினைப்போன்று இங்கு உள்ள தேர் மிகப் பெரியதாகும். எம்பெருமான் குழந்தையாகத் தவழ்ந்து வந்ததால் “மாமதலையாய்”என்றும் காவிரிக்கும் மேன்மை அளித்ததால் “கங்கையிற் புனிதமாய காவேரி” என்றும் ஆழ்வார்கள் மங்களாசாசித்துள்ளனர். திருமங்கையாழ்வார் மட்டும் மங்களாசாசனம் செய்துள்ளார். மொத்தம் 13 தீஞ்சுவைப் பாக்கள். சத்தியகீர்த்தி என்ற சோழவரசன் புத்திரப்பேறு இல்லாது, மார்க்கண்டேய முனிவரால் இத்தலத்திற்கு ஆற்றுப்படுத்தப்பட்டு, இப்பெருமானை வேண்டி புத்திரபேறடைந்து, விமானம், மண்டபம் போன்ற திருப்பணிகள் செய்து, சித்திரை மாதத்தில் பிர்மோத்ஸவமும் நடத்தி வைத்தான்.
சாரநாதப்பெருமாள் கோயில்
கோயிலின் அமைப்பு கோவில் 380 அடி நீளமும் 234 அடி அகலமும் கொண்டமைந்துள்ளது. கிழக்கு நோக்கியுள்ள ராஜ கோபுரம் 90 அடி உயரமானது. கோயிலுக்கு எதிரில் உள்ள சார புஷ்கரிணியின் மேற்கு கரையில் அகத்தியர், பிரம்மா, காவரி ஆகியோருக்குத் தனி சன்னதி உள்ளன.
பாதுகாக்கும் நிறுவனம் இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் வழிபாட்டில் உள்ளது.
அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் திருநறையூர், திருச்சேறை, திருக்கண்ணமங்கை
செல்லும் வழி கும்பகோணத்திலிருந்து சுமார் 14 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. கும்பகோணத்திலிருந்து திருவாரூர் செல்லும் பேருந்துகள் இத்தலம் வழியே செல்கின்றன.
கோவில் திறக்கும் நேரம் காலை 6.00 மணி முதல் 11.00 மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 வரை
சாரநாதப்பெருமாள் கோயில்
அருகிலுள்ள பேருந்து நிலையம் திருச்சேறை
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம் கும்பகோணம்
அருகிலுள்ள விமான நிலையம் திருச்சி
தங்கும் வசதி கும்பகோணம் நகர விடுதிகள்
ஒளிப்படம் எடுத்தவர் தமிழ் இணையக் கல்விக்கழகம்
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் தமிழ் இணையக் கல்விக்கழகம்
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 01 Oct 2018
பார்வைகள் 105
பிடித்தவை 0

தொடர்புடைய வழிபாட்டுத் தலம்