வழிபாட்டுத் தலம்
சேக் மசாய்கு சேக் அலாவுதீன் சாயுபு மஜீத் தர்கா
| வழிபாட்டுத் தலத்தின் பெயர் | சேக் மசாய்கு சேக் அலாவுதீன் சாயுபு மஜீத் தர்கா |
|---|---|
| வேறு பெயர்கள் | மஜீத் தர்கா |
| ஊர் | பள்ளப்பாளையம் |
| வட்டம் | ஈரோடு |
| மாவட்டம் | ஈரோடு |
| உட்பிரிவு | 8 |
| திருக்குளம் / ஆறு | மசூதிக்குளம் |
| வழிபாடு | ஐந்து காலத் தொழுகை |
| திருவிழாக்கள் | ரமலான், பக்ரீத், மிலாடி நபி |
| காலம் / ஆட்சியாளர் | கி.பி.16-ஆம் நூற்றாண்டு |
| கல்வெட்டு / செப்பேடு | மைசூர் உடையார் மன்னர் இரண்டாம் கிருஷ்ணராச உடையார் ( 1734 - 1766 ) காலத்தில் ஈரோடு பகுதி அவர் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது .ஈரோடு காவேரிக்கரையில் உள்ள தர்காவின் பெயர் சேக் மசாய்கு சேக் அலாவுதீன் சாயுபு மஜீத் . கோட்டை அதிகாரிகளான ஐந்து இந்து அதிகாரிகளும் இந்த தர்காவிற்கு வரும் அரதேசி , பரதேசி , பக்கிரிகள் ஆகியோருக்கு நாள் தோறும் கொடை அளிக்கவும் ஆடை கொடுக்கவும் 5 மா நிலம் நன்செய் பூமியைக் கொடையாக கொடுத்தனர் . நாள் 12.6.1761. அந்நிலம் வைராபாளையம் கரையை சேர்ந்த பீளமேடு பகுதியில் தோப்பு அருகில் உள்ளது . அது காலிங்கராயன் வாய்க்கால் பாயும் நன் செய் நிலம் . சந்திர சூரியர் உள்ள வரை இக்கொடை நிலைக்க வேண்டும் என்று கொடுத்துள்ளதாக கல்வெட்டுச் செய்தி கூறுகிறது. |
| சுவரோவியங்கள் | இல்லை |
| சிற்பங்கள் | இறை உருவங்கள், மனித உருவங்கள் மற்றும் விலங்குகள் போன்றவை செதுக்கப்படவில்லை அது இசுலாத்தின் இறைக்கொள்கைக்கு எதிரானது. |
| தலத்தின் சிறப்பு | 400 ஆண்டுகள் பழமையானது. |
|
சுருக்கம்
சேக் மசாய்கு சேக் அலாவுதீன் சாயுபு மஜீத் தர்கா ஈரோடு வட்டாரத்தில் அமைந்துள்ள இசுலாமிய வழிபாட்டுத் தலங்களுள் சிறப்புப் பெற்ற ஒன்றாகும். இங்கு பல இனத்தவரும் வழிபாட்டிற்கு வருவது கண்கூடு. இங்கு மனிதர்களை துன்புறுத்தும் பேய், ஆவி போன்றவை இங்கு வந்தால் விலகிவிடுவதாக தொன்நம்பிக்கை நிலவுகிறது. இப்பள்ளிவாசலின் முன்னே ஊன்றப்பட்டுள்ள கல்வெட்டொன்று பன்றியை கொன்ற பாவத்தில் போகக்கடவாராக என்று கூறுகிறது.
|
|
சேக் மசாய்கு சேக் அலாவுதீன் சாயுபு மஜீத் தர்கா
| கோயிலின் அமைப்பு | இப்பள்ளிவாசல் சிறிய நுழைவாயிலைக் கொண்டதாகக் காணப்படுகிறது. சுற்றிலும் தூ’ண்கள் அமைந்திருக்க, சுற்றுச்சுவர் செல்கிறது. பள்ளியின் வெளிப்புறம் கல்வெட்டு காணப்படுகின்றது. தரைத் தளத்தில் பிரார்த்தனை செய்யப்படுகிறது . |
|---|---|
| பாதுகாக்கும் நிறுவனம் | ஈரோடு தர்ஹா கமிட்டி மற்றும் ஜமாத்தார்கள் |
| அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் | திண்டல் முருகன் கோயில், கொடுமணல் அகழாய்விடம் |
| செல்லும் வழி | ஈரோடு நகரின் மத்தியில் அமைந்துள்ளது. |
| கோவில் திறக்கும் நேரம் | காலை 5.00 முதல் பகல் 12.00 மணி வரை மாலை 5.00 முதல் இரவு 7.00 மணி வரை |
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 27 Feb 2021 |
| பார்வைகள் | 34 |
| பிடித்தவை | 0 |