Back
வழிபாட்டுத் தலம்
ஆபத்சகாயேஸ்வரர் கோயில்
வழிபாட்டுத் தலத்தின் பெயர் ஆபத்சகாயேஸ்வரர் கோயில்
வேறு பெயர்கள் திருப்பழனம், கதலிவனம், கெளசிகாஷ்ரமம், பிரயாணபுரி, பழனிப்பதி
ஊர் திருப்பழனம்
வட்டம் திருவையாறு
மாவட்டம் தஞ்சாவூர்
உட்பிரிவு 1
மூலவர் பெயர் ஆபத்சகாயநாதர்
தாயார் / அம்மன் பெயர் பெரிய நாயகி, சிவசுந்தர கல்யாணி அம்மை
தலமரம் கதலி (வாழை), வில்வம்
திருக்குளம் / ஆறு மங்கள தீர்த்தம் , காவிரி தீர்த்தம், அமுத தீர்த்தம், முனிகுப்பம் தீர்த்தம், தேவதீர்த்தம்
வழிபாடு இரண்டு கால பூஜை.
திருவிழாக்கள் சப்தஸ்தான விழா, மார்கழி திருவாதிரை, ஐப்பசி அன்னாபிஷேகம்
காலம் / ஆட்சியாளர் கி.பி.8-9-ஆம் நூற்றாண்டு / முத்தரையர்கள்
சிற்பங்கள் விமானத்தின் கருவறைக் கோட்டங்களில் அமைந்துள்ள மூர்த்தங்களில் மேல் தளத்தில் கிழக்கே சிவன் மற்றும் பார்வதி, தெற்கே வீணாதர தட்சிணாமூர்த்தி, மேற்கில் அண்ணாமலையார், வடக்கே நான்முகன் நின்ற திருக்கோலத்தில் காட்சியளிக்கின்றனர். அர்த்த மண்டபத்தில் தென்திசை நோக்கி அதிகார நந்தி கை கூப்பிய நிலையில், உடைவாளுடன் காட்சியளிக்கிறார். இறைவனின் திருமுன் சுற்றில் வேணுகோபாலர் குழலுடன் காட்சியளிக்கிறார். நேரே மூலவர் ஆபத்சகாயேசுவரர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். ஆபத்சகாயர் சன்னிதிக்கு சற்று முன்பாகவே சிறிய மண்டபத்தில் சுந்தர நாயகி நின்ற திருக்கோலத்தில் உள்ளார். அம்மை வெளித் திருச்சுற்றில் ஈசனுக்கு இடப்பக்கமாக தனிக்கோவிலில் அருள்பாலிக்கிறார்.
தலத்தின் சிறப்பு 1300 ஆண்டுகள் பழமையானது. தேவாரப் பாடல் பெற்ற திருத்தலம்.
சுருக்கம்
தேவாரப் பாடல் பெற்ற காவிரி வடகரைத் தலங்களில் இத்தலம் 50 வது தலம் ஆகும். திருஞானசம்பந்தர், அப்பர் இத்தலத்தைப் பாடியுள்ளனர். திருப்பழனம் பழம்பெரும் பதி. ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில் முதலாம் ஆதித்த சோழன் மற்றும் அவர் மகன் முதலாம் பராந்தகச் சோழ மன்னராலும் கட்டப்பட்டது. திருவையாற்றைச் சுற்றி அமைந்துள்ள ஏழு தலங்களில் (சப்தஸ்தான தலங்கள்) ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோவில் இரண்டாவதாக அமைந்துள்ளது.
ஆபத்சகாயேஸ்வரர் கோயில்
கோயிலின் அமைப்பு இக்கோயில் ஒரு ராஜகோபுரத்துடனும் அடுத்து ஒரு உள்கோபுரத்துடனும் அமைந்துள்ளது. கொடிமரமில்லை. பலிபீடம் நந்தி உள்ளன. வெளிப் பிரகாரத்தில் விநாயகர், சுப்பிரமணியர் திருமுன்கள் உள்ளன. முன்மண்டபத்தில் வலப்பகுதி வாகன மண்டபமாகவுள்ளது. விநாயகரைத் தொழுது வாயிலைக் கடந்து உட்சென்றால் இடதுபுறம் பிராகாரத்தில் சப்த மாதர்கள், விநாயகர், வேணுகோபாலர் சிற்றாலயங்களும், பல்வகைப் பெயர்களில் அமைந்த சிவலிங்கங்களும், நடராச சபையும், பைரவர், நவக்கிரகமும் உள்ளன.
பாதுகாக்கும் நிறுவனம் இந்துசமய அறநிலையத்துறை
அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் மேலைத் திருக்காட்டுப்பள்ளி, செந்தலை, திருவையாறு
செல்லும் வழி திருவையாறு - கும்பகோணம் பேருந்து வழியில் திருவையாற்றில் இருந்து கிழக்கே 4 கி.மி. தொலைவில் இருக்கிறது. சாலையோரத்தில் கோயில் உள்ளது. திருவையாற்றில் இருந்து நகரப் பேருந்து வசதி உள்ளது.
கோவில் திறக்கும் நேரம் காலை 6.00 மணி முதல் 11.00 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8.00 மணி வரை.
ஆபத்சகாயேஸ்வரர் கோயில்
அருகிலுள்ள பேருந்து நிலையம் திருப்பழனம்
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம் திருவையாறு
அருகிலுள்ள விமான நிலையம் திருச்சி
தங்கும் வசதி திருவையாறு விடுதிகள்
ஒளிப்படம் எடுத்தவர் American Institute of Indian Studies, க.த.காந்திராஜன்
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் American Institute of Indian Studies
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 04 Sep 2018
பார்வைகள் 123
பிடித்தவை 0

தொடர்புடைய வழிபாட்டுத் தலம்