
விநாயகர்
சிற்பத்தின் பெயர் | விநாயகர் |
---|---|
சிற்பத்தின்அமைவிடம் | கரூர் அருங்காட்சியகம் |
ஊர் | கரூர் |
வட்டம் | கரூர் |
மாவட்டம் | கரூர் |
அமைவிடத்தின் பெயர் | கரூர் அருங்காட்சியகம் |
சிற்பத்தின் வகை | சைவம் |
ஆக்கப்பொருள் | கல் |
காலம்/ஆட்சியாளர் | கி.பி. 12-13 - ஆம் நூற்றாண்டு |
விளக்கம்
கணேசர் சிற்பம் எளிய கலைப்பாணியில் வடிக்கப்பட்டுள்ளது. தனிச்சிற்பமாக அமைந்துள்ள விநாயகர் தெளிவாக காணப்படவில்லை. சிதிலமடைந்துள்ளது. நான்கு கைகளுடன் விளங்கும் விநாயகர் துதிக்கையால் தன் இடது முன்கையில் உள்ள மோதகம் அல்லது பழம் ஒன்றை எடுக்கிறார். பின்னிரு கைகளில் அங்குசம், பாசம் விளங்குகின்றன. |
|
ஒளிப்படம்எடுத்தவர் | க.த.காந்திராஜன் |
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் | தமிழ் இணையக் கல்விக்கழகம் |
குறிச்சொல்
|
|
சுருக்கம்
தமிழகத்தில் மிக அதிகமாக வழிபாட்டில் உள்ளவை கணபதி சிற்பங்களாகும். எளிய வடிவினராக கணபதியை அமைத்தல் வழமையாய் இருத்தலின் எண்ணிக்கையில் அதிக சிற்பங்கள் தமிழகத்தில் காணப்படுகின்றன. கணபதியின் உருவமைதி நின்ற கோலம், ஆடற்கோலம், அமர்ந்த கோலம் என்ற மூன்று நிலைகளில் அமைக்கப்படுதல் மரபு. கணபதி இலளிதாசனத்தில் அமர்ந்த கோலத்தினை இச்சிற்பம் காட்டுகிறது. |
|
ஆவண இருப்பிடம் | கரூர் அருங்காட்சியகம் |

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
ஆவண இருப்பிடம் | |
---|---|
தமிழ் இணையக் கல்விக்கழகம் | 19 May 2020 |
பார்வைகள் | 14 |
பிடித்தவை | 0 |