சிற்பம்
கணேசர்
சிற்பத்தின் பெயர் கணேசர்
சிற்பத்தின்அமைவிடம் கரூர் அருங்காட்சியகம்
ஊர் கரூர்
வட்டம் கரூர்
மாவட்டம் கரூர்
அமைவிடத்தின் பெயர் கரூர் அருங்காட்சியகம்
சிற்பத்தின் வகை சைவம்
ஆக்கப்பொருள் கல்
காலம்/ஆட்சியாளர் கி.பி. 12-13 - ஆம் நூற்றாண்டு
விளக்கம்

         கணபதி நான்கு திருக்கைகளுடன் அமர்ந்த கோலம்.முன் இடது கையில் கனி உள்ளது. பின்னிரு கைகளில் அங்குசம், பாசம் விளங்குகின்றன. வயிற்றில் உதரபந்தமாக நாகத்தை அணிந்துள்ளார். மகர பூரிம மகுடம் தலையில் விளங்க, ஒடிந்த கொம்பினை வலது கையில் கொண்டு, லளிதாசனத்தில் பீடத்தின் மீது அமர்ந்துள்ளார்.

ஒளிப்படம்எடுத்தவர் க.த.காந்திராஜன்
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் தமிழ் இணையக் கல்விக்கழகம்
குறிச்சொல்
சுருக்கம்

          தமிழகத்தில் மிக அதிகமாக வழிபாட்டில் உள்ளவை கணபதி சிற்பங்களாகும். எளிய வடிவினராக கணபதியை அமைத்தல் வழமையாய் இருத்தலின் எண்ணிக்கையில் அதிக சிற்பங்கள் தமிழகத்தில் காணப்படுகின்றன. கணபதியின் உருவமைதி நின்ற கோலம், ஆடற்கோலம், அமர்ந்த கோலம் என்ற மூன்று நிலைகளில் அமைக்கப்படுதல் மரபு.  கணபதி இலளிதாசனத்தில் அமர்ந்த கோலத்தினை இச்சிற்பம் காட்டுகிறது.

ஆவண இருப்பிடம் கரூர் அருங்காட்சியகம்
கணேசர்
சிற்பம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 19 May 2020
பார்வைகள் 13
பிடித்தவை 0

தொடர்புடைய சிற்பம்