சிற்பம்
இலிங்கோத்பவர்
இலிங்கோத்பவர்
சிற்பத்தின் பெயர் | இலிங்கோத்பவர் |
---|---|
சிற்பத்தின்அமைவிடம் | தஞ்சை பெருவுடையார் கோயில் |
ஊர் | தஞ்சாவூர் |
வட்டம் | தஞ்சாவூர் |
மாவட்டம் | தஞ்சாவூர் |
அமைவிடத்தின் பெயர் | கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |
சிற்பத்தின் வகை | சைவம் |
ஆக்கப்பொருள் | கருங்கல் |
காலம்/ஆட்சியாளர் | கி.பி.10-ஆம் நூற்றாண்டு/முதலாம் இராஜராஜன் |
விளக்கம்
இலிங்கத்திலிருந்து வெளிப்பட்டு அடிமுடியாதவாறு நின்றருளும் இலிங்க புராணத் தேவர்
|
|
ஒளிப்படம்எடுத்தவர் | காந்திராஜன் க.த. |
குறிச்சொல்
|
|
சுருக்கம்
இலிங்கோத்பவர் பிளந்த இலிங்கத்தின் நடுவில் சமபாதத்தில் நின்றுள்ளார். நான்கு திருக்கைகளில் பின்னிருகைகள் மான், மழுவினைப் பற்றியுள்ளன. முன் கைகளில் வலது கை அபய முத்திரையையும், இடது கை இடையில் வைத்தவாறு கடி முத்திரையையும் கொண்டுள்ளன. ஜடாமகுடராய் விளங்கும் அண்ணாமலையாருக்கு தொடை வரையிலான அரையாடை காணப்படுகிறது. இடைக்கட்டின் ஆடை முடிச்சுகள் தொடையின் பின்புறம் இருபுறமும் நீண்டு தொங்குகின்றன. வயிற்றில் உதரபந்தம், மார்பில் முப்புரிநூல் மற்றும் காதணி, கழுத்தணி, கையணி ஆகிய இன்ன பிறவணிகளைப் பூண்டுள்ளார். இலிங்கத்தின் மேற்புறம் நான்குமுகம் மற்றும் நான்கு திருக்கைகளுடன் பிரம்மன் கந்தர்வரைப் போன்று பறந்த நிலையில் காட்டப்பட்டுள்ளார். மேலிருகைகளில் அக்கமாலையும், கெண்டியும் உள்ளன. கீழிருகைகளில் வலது இலிங்கோத்பவரை காட்டுவதுபோலவும் இடது விஸ்மய முத்திரை போன்றும் உள்ளது. முழுநீள ஆடை அணிகலன்களுடன் பிரம்மன் அண்ணலின் முடியினைக் காண முனைகிறார். இலிங்கத்தின் அடிப்பகுதியில் விஷ்ணு வராகராய் இரண்டு கைகளாலும் முகக் கொம்பினாலும் நிலத்தைத் தோண்ட முனைபவராய் காணப்படுகிறார். குப்புற படுத்த நிலையில் கேழலாய் அண்ணலின் அடி காணச் செல்பவராய் உள்ள விஷ்ணுவின் அரையாடை தெரிகிறது.
|
|
குறிப்புதவிகள்
|
சிற்பம்
இலிங்கோத்பவர்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
ஆவண இருப்பிடம் | |
---|---|
தமிழ் இணையக் கல்விக்கழகம் | 08 May 2017 |
பார்வைகள் | 13 |
பிடித்தவை | 0 |