சிற்பம்

இலிங்கோத்பவர்

இலிங்கோத்பவர்
சிற்பத்தின் பெயர் இலிங்கோத்பவர்
சிற்பத்தின்அமைவிடம் கைலாசநாதர் கோயில்
ஊர் காஞ்சிபுரம்
வட்டம் காஞ்சிபுரம்
மாவட்டம் காஞ்சிபுரம்
அமைவிடத்தின் பெயர் கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம்
சிற்பத்தின் வகை சைவம்
ஆக்கப்பொருள் மணல் கல்
காலம்/ஆட்சியாளர் கி.பி.8-ஆம் நூற்றாண்டு/இராஜசிம்மவர்மப் பல்லவன்
விளக்கம்
அயனும் மாலும் அடிமுடி அறிய முடியா அண்ணாமலையார் இலிங்கத்தின் நடுவிலிருந்து வெளிப்படும் காட்சி
ஒளிப்படம்எடுத்தவர் காந்திராஜன் க.த.
குறிச்சொல்
சுருக்கம்
பிளந்த இலிங்கத்தின் நடுவே இருந்து வெளிப்படும் இலிங்கபுராண தேவர் மாலும் பிரமனும் தன் அடிமுடி அறிய இயலாதவாறு சமபாதத்தில் நிற்கிறார். ஆனால் பாதம் தெரியவில்லை. அண்ணாமலையாருக்கு தலையின் பின்புறம் ஒளிவட்டம் காட்டப்பட்டுள்ளது. ஜடாமகுடம் தரித்துள்ள இலிங்க புராண தேவரின் நான்கு திருக்கைகளில் வலது கைகள் பொரிந்துள்ளன. இடது கையை இடையில் வைத்தவாறும், பின் இடது கையை கடக முத்திரை காட்டியபடியும் உள்ளார். அரையாடை அணிந்துள்ள தீக்கால் அடிகளின் மார்பில் பட்டையாக முப்புரிநூல் உள்ளது. கைகளில் கடகவளை, முன்வளை தெரிகின்றன. கீழே நான்கு திருக்கைகளுடன் கருடாசனத்தில் கேழல் முகத்தினராய், முன்னிரு கைகளால் பூமியைத் தோண்டி அண்ணலின் அடி காண விழையும் திருமால் காட்டப்பட்டுள்ளார். பன்றி முகங்கொண்ட திருமாலின் உருவம் சிதைந்துள்ளது. அண்ணாமலையாரின் இருபுறமும் வாழ்த்தொலிக்கும் பறந்த நிலையிலுள்ள கந்தர்வர்களும், தீக்கால் அடிகளின் காலருகே இருபுறமும் நின்ற நிலையில் வாழ்த்தொலிக்கும் கணங்களும் காட்டப்பட்டுள்ளன.
குறிப்புதவிகள்
இலிங்கோத்பவர்
சிற்பம்

இலிங்கோத்பவர்

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 08 May 2017
பார்வைகள் 14
பிடித்தவை 0

தொடர்புடைய சிற்பம்