சிற்பம்

இலிங்கோத்பவர்
சிற்பத்தின் பெயர் | இலிங்கோத்பவர் |
---|---|
சிற்பத்தின்அமைவிடம் | கோனேரிராஜபுரம் (திருநல்லம்) உமாமகேசுவரர் கோயில் |
ஊர் | திருநல்லம் (கோனேரிராஜபுரம்) |
வட்டம் | குத்தாலம் |
மாவட்டம் | நாகப்பட்டினம் |
அமைவிடத்தின் பெயர் | கோனேரிராஜபுரம் (திருநல்லம்) உமாமகேசுவரர் கோயில் |
சிற்பத்தின் வகை | சைவம் |
ஆக்கப்பொருள் | கருங்கல் |
காலம்/ஆட்சியாளர் | கி.பி.10-ஆம் நூற்றாண்டு / முற்காலச் சோழர் - செம்பியன் மாதேவியார் |
விளக்கம்
a:1:{i:0;s:3408:"இலிங்கோத்பவர் பிளந்த இலிங்கத்தின் நடுவில் சமபாதத்தில் நின்றுள்ளார். தீக்கால் அடிகள் இலிங்கத்திலிருந்து வெளிப்படுதல் இலிங்கபுராணத்தில் கூறப்படுகிறது. ஜடாமகுடம் தரித்து, நான்கு திருக்கைகளில் மேலிரு கரங்களில் மான், மழுவினைக் கொண்டுள்ளார். முன்னிரு கரங்களில் வலது கை காக்கும் முத்திரையிலும் ஒரு விரல் சிதைந்துள்ளது. முன் இடது கையை கடி முத்திரையாக இடையில் வைத்துள்ளார். அரைக்காற் சட்டை அணிந்துள்ள இலிங்கபுராண தேவர் நன்கு வடிவமைக்கப்பட்ட அணி வகைகளை உடலில் அணிந்துள்ளார். அண்ணாமலையாருக்கு தொடை வரையிலான அரையாடை காணப்படுகிறது. இடைக்கட்டின் ஆடை முடிச்சுகள் தொடையின் பின்புறம் இருபுறமும் நீண்டு தொங்குகின்றன. வயிற்றில் உதரபந்தம், மார்பில் முப்புரிநூல் மற்றும் காதணி, கழுத்தணி, கையணி ஆகிய இன்ன பிறவணிகளைப் பூண்டுள்ளார். இலிங்கத்தின் மேற்புறம் அன்னப் பறவையின் மேல் அமர்ந்தபடி நான்முகன் பறந்த நிலையில் காட்டப்பட்டுள்ளார். இலிங்கத்தின் அடிப்பகுதியில் விஷ்ணு வராகராய் இரண்டு கைகளாலும் முகக் கொம்பினாலும் நிலத்தைத் தோண்ட முனைபவராய் காணப்படுகிறார். குப்புற படுத்த நிலையில் கேழலாய் அண்ணலின் அடி காணச் செல்பவராய் உள்ள விஷ்ணுவின் அரையாடை மற்றும் அணிகலன்கள் நன்கு தெரிகின்றன. இருபுறமும் நான்முகனும் திருமாலும் நின்ற நிலையில் புடைப்புச் சிற்பமாக அமைக்கப்பட்டுள்ளனர். இருவரும் நாற்கைகளுடன், அவரவர்க்குரிய கருவிகளுடனும், ஆடையணிகளுடனும் காட்டப்பட்டுள்ளனர். ";}
|
|
ஒளிப்படம்எடுத்தவர் | காந்திராஜன் க.த. |
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் | தமிழ் இணையக் கல்விக் கழகம் |
குறிச்சொல்
|
|
சுருக்கம்
நாகப்பட்டினம் மாவட்டத்தில் குத்தாலம் அருகேயுள்ள திருநல்லம் என்னும் பாடல் பெற்ற தலமாகிய கோனேரிராஜபுரம் என்று அழைக்கப்படும் உமாமகேசுவரர் கோயிலில் அமைந்துள்ள இலிங்கோத்பவர் சிற்பம் செம்பியன் மாதேவியாரின் கலைப்பாணியாகக் கருதப்படுகிறது.
|
|
குறிப்புதவிகள்
ஆசனபதம் (சிற்பநூல்), உக்கிரபீடம் (சிற்பநூல்), உபபீடகம் (சிற்பநூல்), தண்டிலம் (சிற்பநூல்), பரமசாயிகம் (சிற்பநூல்), மகாபீடபதம் (சிற்பநூல்), மண்டூகம் (சிற்பநூல்), மயமதம், மானசாரம், வாசுத்து சூத்திர உபநிடதம், ஸ்ரீதத்வநிதி, அனுபோக பிரசன்ன ஆரூடம், அருட் கொடி சிற்பசாஸ்திரக் கண்ணாடி, காக்கையர் சிற்பம் புசண்டர் சல்லியம், சர்வார்த்த சிற்ப சிந்தாமணி, சிற்பச் செந்நூல், வை. கணபதி ஸ்தபதி, மாமல்லபுரம் கலைக் கல்லூரி, மாமல்லபுரம், T. A. Gopinatha Rao, Elements of Hindu iconography, Motilal Banarsidass Publisher, 1993 .
|
சிற்பம்

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
ஆவண இருப்பிடம் | |
---|---|
தமிழ் இணையக் கல்விக்கழகம் | 06 Feb 2020 |
பார்வைகள் | 13 |
பிடித்தவை | 0 |
தொடர்புடைய சிற்பம்

கண்டராதித்தன்
சைவம், கி.பி.10-ஆம் நூற்றாண்டு / முற்காலச் சோழர் - செம்பியன் மாதேவியார்
19
|
0
|
0
|
0
வைகுண்டநாதர்
வைகுண்டநாதர்
வைணவம், கி.பி.8-ஆம் நூற்றாண்டு/இரண்டாம் நந்திவர்மப் பல்லவன்
13
|
0
|
0
|