சிற்பம்
நான்முகன்
நான்முகன்
சிற்பத்தின் பெயர் | நான்முகன் |
---|---|
சிற்பத்தின்அமைவிடம் | தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயில் |
ஊர் | தாராசுரம் |
வட்டம் | கும்பகோணம் |
மாவட்டம் | தஞ்சாவூர் |
அமைவிடத்தின் பெயர் | கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |
சிற்பத்தின் வகை | புராணச் சிற்பம் |
ஆக்கப்பொருள் | கருங்கல் |
காலம்/ஆட்சியாளர் | கி.பி.12-ஆம் நூற்றாண்டு/இரண்டாம் இராஜராஜன் |
விளக்கம்
படைக்கும் கடவுள் நான்முகன்
|
|
ஒளிப்படம்எடுத்தவர் | காந்திராஜன் க.த. |
குறிச்சொல்
|
|
சுருக்கம்
படைப்புக் கடவுள் நான்முகன் ஜடாமகுடத்துடன் விளங்குகிறார். வலது காலை ஊன்றி, இடது காலை சற்று தளர்வாக வைத்த நிலையில் வைஷ்ணவத்தில் நிற்கிறார். நான்கு திருக்கைகளில் மேற்கைகளில் அக்க மாலையும், கெண்டியும் பிடித்துள்ளார். முன்னிரு கைகள் சிதைந்துள்ளன. காதுகளில் குண்டலங்கள் திகழ்கின்றன. கழுத்தில் கண்டிகை, சரப்பளி, அரும்புச்சரம், மார்பில் முப்புரிநூல் அணிந்துள்ளார். இடையில் அரைப்பட்டிகையுடன் கூடிய நீண்ட ஆடையை கணுக்கால் வரை உடுத்தியுள்ளார். ஆடையின் இடைக்கட்டு முடிச்சு பின்புறம் விரிந்து பரந்துள்ளது. கால்களில் கழல்களும், பாதங்களில் சதங்கைகளும் காட்டப்பட்டுள்ளன.
|
|
குறிப்புதவிகள்
|
சிற்பம்
நான்முகன்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
ஆவண இருப்பிடம் | |
---|---|
தமிழ் இணையக் கல்விக்கழகம் | 08 May 2017 |
பார்வைகள் | 13 |
பிடித்தவை | 0 |