சிற்பம்

நான்முகன்
சிற்பத்தின் பெயர் | நான்முகன் |
---|---|
சிற்பத்தின்அமைவிடம் | புள்ளமங்கை |
ஊர் | பசுபதி கோயில் |
வட்டம் | பாபநாசம் |
மாவட்டம் | தஞ்சாவூர் |
அமைவிடத்தின் பெயர் | கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |
சிற்பத்தின் வகை | புராணச் சிற்பம் |
ஆக்கப்பொருள் | கருங்கல் |
காலம்/ஆட்சியாளர் | கி.பி.10-ஆம் நூற்றாண்டு/முதலாம் பராந்தக சோழன் |
விளக்கம்
கருவறை விமானம் வடக்கு தேவகோட்டத்தில் நிற்கும் நான்முகன்
|
|
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் | முனைவர் கோ. சசிகலா |
குறிச்சொல்
|
|
சுருக்கம்
புள்ளமங்கை கோயில் கருவறை விமானத்தின் வடக்குப்புறம் உள்ள தேவகோட்டத்தில் பிரம்மன் தாமரைப் பீடத்தின் மேல் சமபாதத்தில் நேராக நின்றநிலையில் உள்ளார். மூன்று முகங்கள் மூடிய விழிகளோடு தெரிகின்றன. ஜடாமகுடம், நீள் காதுகளில் பத்ரகுண்டலங்கள், கழுத்தில் வேலைப்பாடுள்ள இரு அணிகள் கைகளில் கேயூரம், முன் வளைகள், நடுமார்பில் பிரம்ம முடிச்சுடன் கூடிய முப்புரி நூல், வயிற்றில் உதரபந்தம், நடுவிரல் தவிர எல்லாவிரல்களிலும் வளையங்கள், இருபுறமும் முடிச் சுகளோடு கணுக்கால் வரை நீண்டு தொங்கும் ஆடை, கால்களில் பாடகம் என ஆடையணி வகைகளைக் கொண்டு விளங்குகிறார். நான்கு திருக்கைகளில் மேலிருகைகளில் அக்கமாலையும், கெண்டியும் விரல்களில் உள்ளன. கீழிரு கைகளில் இடது கை கடி முத்திரையாகவும், வலதுகை அபய முத்திரையாகவும் உள்ளன. பிரம்மனின் தலைக்கு மேல் குடை காட்டப்பட்டுள்ளது. பிரம்மனின் இருபுறமும் இரு ஆடவர் சிற்பங்கள் உள்ளன. அவர்கள் இளவயது வேதியர்கள் போன்ற தோற்றத்தைப் பெற்றுள்ளனர். ஒரு காலை மடக்கி முழங்கால் நிலத்தில் படுமாறும் மற்றொரு காலை மடக்கி மேலே உயர்த்தியவாறும் அமர்ந்த நிலையில் இருவரும் உள்ளனர். இருவரும் நடுவிலுள்ள இறைவனைப் போற்றுவதாக கைகளை முத்திரையில் வைத்துள்ளனர். ஜடாபாரம், நீள்காதுகளில் குண்டலங்கள். கழுத்தில் கண்டிகை, சரப்பளி, இடதுதோளில் மடிந்து தொங்கும் முப்புரிநூல் (உத்தரீயம்), கை வளைகள் இடையில் முடிச்சுகளோடு கூடிய ஆடை என இருவருக்கும் ஒன்று போலே ஆடையணிகள் அமைந்துள்ளன.
|
|
குறிப்புதவிகள்
|
சிற்பம்

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
ஆவண இருப்பிடம் | |
---|---|
தமிழ் இணையக் கல்விக்கழகம் | 08 May 2017 |
பார்வைகள் | 15 |
பிடித்தவை | 0 |